பால் விலை கோடியை தொடுகிறது





மலையாளத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ‘முகுந்த’ என்ற இளம் ஹீரோவுடன் இணைத்து காதல் கிசுகிசு மற்றும் ரகசிய திருமணம் செய்ததாக வந்த வதந்தியால் வருத்தப்பட்ட கேரளத்து ‘நம்பீச’ நடிகை, தமிழ் மீடியா மீது செம கடுப்பாக இருக்கிறாராம். அவர்கள்தான் இல்லாததும் பொல்லாததும் எழுதிக் குவித்து, தன் மார்க்கெட்டை காலி செய்துவிட்டார்கள் என்று, நெருங்கிய தோழிகளிடம் புலம்புகிறாராம். இதனால், கோலிவுட்டில் இருந்து யார் போன் செய்தாலும், அட்டெண்ட் செய்வது இல்லையாம். முன்பெல்லாம் எஸ்.எம்.எஸ் செய்தால், உடனே பதில் எஸ்.எம்.எஸ் அனுப்புவாராம். இப்போது எத்தனை முறை குறுஞ்செய்தி அனுப்பினாலும், நோ ரெஸ்பான்ஸ் என்கிறார்கள், நடிகையின் செய்கையால் நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள்.

‘சுனேன’ ஹீரோயினுக்கு தமிழில் ஒரு படம் மட்டுமே இருக்கிறது. என்றாலும், அடுத்த படத்தில் நடிப்பது குறித்து அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்கிறார், அவரை தொடர்புகொள்ள முடியாமல் தோல்வி யடைந்த இயக்குநர் ஒருவர். அதாவது, புதிதாக ஒரு படம் இயக்க திட்டமிட்டிருந்த அவர், அந்த கதைக்கு இந்த நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து, அவரை எப்படி தொடர்புகொள்வது என்று தெரியாமல் முழித்தாராம். பிறகு எப்படியோ அவரது நம்பரை வாங்கி தொடர்புகொண்டாராம். ஆனால், எதிர்த்தரப்பில் நல்ல பதில் கிடைக்கவில்லையாம். இதையடுத்து பலமுறை அந்த நம்பரை தொடர்புகொண்டாலும், ரெஸ்பான்ஸ் இல்லையாம். ஒருவேளை, நடிகையின் நம்பர் என்று நினைத்து, வேறொரு அடையாளம் தெரியாத நபருக்கு பேசிவிட்டாரோ என்னவோ.



‘களவாணி’ ஹீரோவுடன் ‘விருப்பம்’ படத்தில் ஜோடி சேர்ந்த ‘காஜல்’ நடிகையின் தங்கை அவர். அதற்குப் பிறகு இங்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், டோலிவுட்டே சரணம் என்று அங்கு தஞ்சமடைந்து விட்டார். அங்குள்ள படங்களில் எதைக் காட்டி நடிக்க வேண்டுமோ அதைக் காட்டி நடித்து, ஏராளமான பணத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் அவரை தமிழில் நடிக்க அழைப்பு விடுத்தனர். அதை பலமாக தலையாட்டி மறுத்துவிட்ட நடிகை, டோலிவுட்டில் மட்டும்தான் அதிக சம்பளம் கிடைக்கிறது என்று, ஆந்திராவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இந்நிலையில், அக்காவின் சிபாரிசு மூலம் பாலிவுட்டில் கால் பதிக்க முயற்சித்து வரும் அவர், ஒருமுறை அக்கா சிபாரிசு செய்தும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்ற கதைதான்.

வாயில் வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டவர்கள், குதறிக் குதறி பேசுவதைப் போல், பொது இடங்களிலும் சரி, நடிக்கும் படங்களிலும் சரி, ஒருமாதிரியாகப் பேசுவதுதான் ‘களவாணி’ ஹீரோவின் ஸ்டைல். இதை பலர் கிண்டலடித்து, கேலி செய்தபோது கூட அவர் வருத்தப்பட்டது இல்லையாம். குரல் என்பது கடவுள் கொடுத்த வரம் என்று வெள்ளந்தியாகப் பேசும் அவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் குரல் பற்றி யாராவது ஜாடை மாடையாகப் பேசினாலும் கண்டு கொள்வது இல்லை என்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘தேசிங்கு’ படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற ‘புகை பிடிக்காதீர்கள்’, ‘மது அருந்தாதீர்கள்’ என்ற விழிப்புணர்வு வாசகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் உச்சரித்தபோது, தியேட்டரில் ஏராளமான ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்களாம். தன்னையும், தன் குரலையும் கிண்டல் செய்பவர்களைப் பார்த்து, ‘இப்ப என்ன சொல்றீங்க?’ என்று கேட்கிறாராம் ஹீரோ.

‘555’ அறிமுக நடிகையின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள், இனிமேல் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும், விரைவில் அவர் தன் காதலனை திருமணம் செய்துகொள்வார் என்றும் தகவல் பரப்பி வருகிறார்களாம். இதை நேரடியாகக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை, ‘இந்த தேசத்தை விட, கேரள தேசமே மேல்’ என்று, சொந்த ஊருக்கு ஓடிவிட்டார். அங்கிருந்து போன் செய்து, ‘நான் யாரையும் லவ் பண்ணலை. என்னை பிடிக்காத யாரோ ஒருத்தர்தான் இந்த மாதிரி காஸிப் பரப்பிக்கிட்டிருக்காங்க. தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படறேன். பிளீஸ், அந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க’ என்று கெஞ்சுகிறாராம்.

மேலும், புதுப்பட வாய்ப்புக்கு யாரை தூது அனுப்புவது என்று யோசித்த நடிகை, முன்னணி ஹீரோயினுக்கு மேனேஜராக இருந்த ஒருவரையே தனக்கும் மேனேஜராக நியமித்து இருக்கிறாராம்.



கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ‘பால்’ நடிகைக்கு திடீரென்று ஏற்பட்ட மவுசுக்குப் பிறகு மல்லுவுட்டை மறந்து விட்டாராம். இப்போது அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்ந்து விட்டன. அந்தஸ்தும் உயர்ந்து விட்டது. கோடியைத் தொடுகின்ற அளவுக்கு சம்பளம் கூடியுள்ள நிலையில், மிகக் குறைந்த சம்பளத்தை மட்டுமே கொடுக்கின்ற மலையாளப் படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுப்பது இல்லை யாம். நிறைய சிரமங்களைச் சந்தித்தபிறகுதான் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அதை தக்கவைத்துக் கொள்வதற்கு நிறைய போராட வேண்டியிருக்கிறது. இந்நிலையில், மிகவும் குறைந்த சம்பளத்துக்கு நடிக்க ஆரம்பித்தால், தன் மார்க்கெட் காலியாகி விடும் என்ற பயம்தான் அம்மணியை இப்படி நடந்துகொள்ள வைக்கிறது என்கிறார்கள்.

எவ்வளவுதான் பில்டப் கொடுத்தாலும், தன்னை யாரும் தேடி வந்து தமிழ்ப் படத்தில் ஒப்பந்தம் செய்வது இல்லை என்ற நிஜம், ‘பொய்’ அறிமுக நடிகையின் உள்ளத்தை பெரும் நெருப்பாய் சுடுகிறதாம். தோற்றத்தில் ஓரளவு ‘கம்பீரத்தனம்’ இருப்பதை அவர் ஒப்புக்கொள்கிறார் என்றாலும், அதற்குப் பொருத்தமான கேரக்டரில் நடிக்கக்கூடவா தனக்கு தகுதியும், அழகும், திறமையும் இல்லை என்று காட்டமாகக் கேட்கிறார். இப்போது மல்லுவுட், பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை, மீண்டும் தமிழுக்கு வந்தால், பேசப்படுகின்ற கேரக்டராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

‘நமீ’ நடிகையை அரசியலுக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள் என்று அவரது தரப்பில் இருந்து அடிக்கடி சொல்கிறார்களே தவிர, இதுவரை எந்த அரசியல் கட்சியும் அவரைப்பற்றி இதுபோல் ஒரு தகவல் சொன்னது இல்லை. இது ஒருபுறம் இருக்கட்டும். அரசியலில் குதிக்க நடிகைக்கு ஆசையும், ஆர்வமும் இருக்கிறதா என்று கேட்டால், உடனே தலையசைத்து மறுக்கிறாராம். தனக்கு சினிமா தான் பணத்தையும், புகழையும் வாரிக் கொடுத்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லாத அவர், திடீரென்று அரசியலுக்குச் சென்றால், இருப்பதையும் இழந்து நிற்க வேண்டிய நிலை வருமே என்று அஞ்சுகிறாராம்.

ஒரு காலத்தில் ‘ஒல்லிப்பிச்சான்’ நடிகருக்கு ஜோடியாக நடித்த நடிகை அவர். பிறகு சில படங்களில் வந்து, போனார். ‘சீயான்’ நடிகருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டார். திடீரென்று ஒரு நடிகருடன் நிச்சய தார்த்தம் என்பதாகவும் தகவல் கசிந்தது. பிறகு அது இல்லை என்றானது. மறுபடியும் நடிகை ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. ஆனால், என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இப்போது நடிகையை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்கிறார்கள். யார் போன் செய்தாலும், தாய்க்குலம் மட்டுமே பதிலளிக்கிறாராம். எந்தப் படத்தில் நடிக்கிறார் என்று மகளைப் பற்றிக் கேட்டால், ‘இப்ப அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? அவள் நடிக்கிற படத்தைப் பற்றி பி.ஆர்.ஓ சொல்வாரு. வெயிட் பண்ணுங்க’ என்று, நறுக்கென்று பேச்சை முடித்து விடுகிறாராம்.



திரைக்கு வந்த ‘லவ்வர் குவார்ட்டர்ஸ்’ உள்பட ஓரிரு தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சாண்டல்வுட் நடிகை அவர். சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டாராம். அப்போது தகவல்கள் வெளியானது என்றாலும், திடீரென்று இப்போது அவரைப் பற்றி வதந்தி பரப்பி வருகிறார்களாம். காரணம் என்னவென்று தெரியவில்லை. அவருக்கு யாருடன் திருமணம் நடந்தது என்பது குறித்த ஆராய்ச்சியில் பலரும் ஈடுபட்டிருக்கும் மர்மம் என்ன என்று தெரிந்துகொள்ள, நடிகையும் ரொம்ப ஆர்வமாகக் காத்திருக்கிறாராம்.

(படத்தில் இருக்கும் நடிகைகள் மானஸ்வினி, ரசனா மௌர்யா, மோனிரா ஆகியோருக்கும் இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)
- மாயன்