பாங்க்ஸியின் ஓவியம்



இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கிராஃபிட்டி கலைஞன் பாங்க்ஸி. சுவரில் எழுதும் கலையை கிராஃபிட்டி என்று அழைக்கின்றனர். பாங்க்ஸியின் கலைச்செயல்பாடு அதிகாரத்துக்கு எதிராக இருப்பதால் தனது அடையாளம், பெயரை மறைத்து இயங்கிவருகிறார். ஆம்; பாங்க்ஸி என்பது இவரது பெயர் அல்ல.
சமீபத்தில் இவர் பழைய வால்வோ லாரி ஒன்றின் மீது ஒரு ஓவியத்தை வரைந்தார். அந்த லாரியின் மதிப்பு 8 கோடிக்கு எகிறிவிட்டது. இருப்பினும் அந்த லாரியை யாருமே சீண்டவில்லை என்பது இதில் ஹைலைட்.