ஆச்சர்யம்



கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவிற்கு உலகம் பசுமையாக மாறியுள்ளது. அதாவது 20 வருடங்களில் ஐந்து சதவீத பசுமை அதிகரித்துள்ளது. இந்த ஆச்சர்ய உண்மையை வெளிப்படுத்திய இந்தப் புகைப்படம் தான் கடந்த வாரத்தில் செம வைரல். ‘நாசா’வின் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் இது. இந்த மாற்றத்துக்கு முதன்மை காரணமாக சீனாவும், இந்தியாவும் இருப்பதாக ‘நாசா’ தெரிவித்துள்ளது.