நாடியா முரத்!
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்குப் பாலியல் அடிமை, தப்பிக்க முயன்றால் பல மணி நேர கூட்டு வன்புணர்வு மற்றும் சாட்டையடி, தனிமைச் சிறை... இப்படி பல கொடுமைகளைச் சந்தித்த ஒரு பெண் என்ன செய்வாள்? தற்கொலை செய்துகொள்வாள் அல்லது பைத்தியமாகிவிடுவாள். ஆனால், தன்னம்பிக்கைச் சுடராக மிளிர்கிறார் நாடியா முரத். ஆம்; 2018-ம் வருடத்துக்கான அமைதிக்கான நோபல் பரிசை மருத்துவர் டெனிஸ் முக்வேஜே வுடன் சேர்ந்து வென்றிருக்கிறார் நாடியா.
 ஈராக்கில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த நாடியாவின் துணிச்சல்மிக்க செயல்பாடுகள் தான் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வெளிச்சத்துக்கு வர முக்கிய காரணம். தன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்த நாடியா, ‘The Last Girl: My Story of Captivity, and My Fight Against the Islamic State’ என்ற சுயசரிதையை கடந்த வருடம் வெளியிட்டார். இப்புத்தகம் நோபல் கமிட்டியின் கைக்குப் போக, ‘நோபல் பரிசு வென்ற முதல் ஈராக்கிய பெண்’ என்ற புதிய அந்தஸ்தைப் பெற்று விட்டார் நாடியா. இப்போது அவரின் வயது 25.
|