முத்தாரம் நேர்காணல்



இளைஞர்களை வாழ்வதற்கு தயார் செய்வதே சரியான கல்வி!

உ.பி.யின் ஃபருக்காபாத்தில் பிறந்தவரான ரேணு கடோர், தன் 19 வயதிலேயே அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். பர்டியூ பல்கலையில் முதுகலை பட்டம் வென்றவர் இன்று ஹூஸ்டன் பல்கலையின் தலைவர்.  ஃபரூக்காபாத் டு ஹூஸ்டன் வரையிலான பயணத்தில்
முக்கியமான திருப்பங்களாகக்கருதுபவற்றை கூறுங்கள்?  

பர்டியூ பல்கலையில் அட் மிஷன் கிடைத்தது முக்கியமான திருப்பம். இன்று எனக்கு கிடைத்துள்ள விஷயங்களுக்கு அதுவே ஆதாரம். பேராசிரியராக பணி யாற்றியபோது, ஆராய்ச்சி செய்ய என் நண்பர் வற்புறுத்திய நிகழ்ச்சி என் வாழ்வை மாற்றிய இரண்டாவது நிகழ்வு. பல்கலைக்கழக தலைவருக்கு உதவியாளராக இருந்தபோது சமூகத்திற்கும் பல்கலைக்கழகத்திற்குமான உறவைப் புரிந்துகொண்டேன். தலைமைத்துவ வழிகளை எனது தந்தை வழியாகக்கண்டறிந்தேன்.
 
அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாமல் எப்படி சமாளித்தீர்கள்?  

அமெரிக்காவுக்கு வந்து 6 மாதங்கள் கழித்து கீழே லாண்டரிக்கு துணிகளை சலவை செய்யச் சென்றேன். திடீரென மூடிக்கொண்ட கதவை எப்படி திறப்பது, யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியுமாமல் பதறிவிட்டேன். இன்று பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்றாலும் அன்றைய நாளின் பதற்றத்தை ஆயுளுக்கும் மறக்கமுடியாது. பின்னர் சீரியல்களைப் பார்த்து ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டேன்.
 
அமெரிக்காவில் பெற்ற பல்கலைக் கழகத் தலைவர் என்ற தகுதியை இந்தியாவில் உங்களால் பெற்றிருக்கமுடியுமா?  

நிச்சயம் முடியாது. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பழமை வாதிகள் உண்டு. விமர்சனங்கள், ஏளனங்கள் என அனைத்தையும் கடந்து வந்துள்ளேன். பெண்களுக்கென வரையறைகளைக் கொண்ட எங்களுடைய மார்வாடி குடும்பத்தில் ஒருவராக இந்தியாவில் இருந்திருந்தால் எனக்கு பல்கலைக்கழகத் தலைவர் என்ற உயர்வு சாத்தியமில்லை.
 
தரமான கல்வி என்பதற்கு அர்த்தம் என்ன?  

வாழ்க்கைக்கு உங்களைத் தயார்படுத்துவதே கல்வி. கணித பார்முலாக்களை படித்து தேர்வில் வென்று அதனை மறந்துபோவதால் என்ன பிரயோஜனம்? சக மனிதர்களுக்கு இரங்கி, உதவி, அவர்கள் உதவி வாழ உதவுவதே கல்வியின் லட்சியமாக இருக்க வேண்டும். மேல்நிலைக்கல்வியை லாபநோக்கிற் காக சிலர் சிதைத்து விட்டனர்.  
 
பல்கலைக்கழகம் மக்களோடு இணைந்திருப்பது அவசியமா?  

பல்கலைக்கழகம் என்பது நீர்க்குமிழியாக தனி உலகில் இருக்கமுடியாது. நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மக்களுக்காக செயல்படுவதே கல்வி நிலையங்களின் நோக்கமாக இருக்கவேண்டும்.
 
ஆசிரியராக, பல்கலைக்கழக நிர்வாகியாக கல்லூரியில் உருவாகும் விவாதங்களுக்கான எல்லைகள் என்று எதனைக் குறிப்பிடுவீர்கள்?
 
பிறருக்கு பிடிக்கவில்லையென்றாலும் உங்களது மனதிலிருக்கும் கருத்துக்களை முன்வைக்கும் தைரியத்தை கல்லூரி வளாகம் உங்களுக்குத் தரவேண்டும். சைபர் உலகில் மக்களோடு கலந்து பழகியவர்களுக்கு புதிய கலாசாரங்களைக் கொண்டவர்களோடு பிரச்னை இருக்காது. ஆனால் நிஜ உலகில் மனிதர்களோடு பழகுவது, புரிந்துகொள்வது தனி அனுபவம் என்பதை மாணவர்கள் விரைவில் உணர்ந்துகொள்ள நாங்கள் உதவுகிறோம்.   

எங்களது பல்கலைக்கழக வராண்டாவில் நடக்கும்போது ஏழுக்கும் மேற்பட்ட மொழியோசைகளைக் கேட்கலாம். 2+2 என்ற எண்களின் கூட்டுத்தொகை 4. இதனை தீர்மானிப்பது எண்களுக்கிடையே உள்ள அடையாளம்தான். அவை இல்லாதபோது விடை 22 என்பதை நாங்கள் ரிந்துகொண்டிருக்கிறோம்.

-நன்றி: Pranay Sharma, outlookindia.com

நேர்காணல்:ரேணு கடோர்.

தமிழில்: ச.அன்பரசு