ஏவுகணை கிலி!



இயான்சியான் ஆற்றில் மும்முரமாக பயிற்சி செய்யும் தென்கொரிய கடற்படை வீரர்களின் காட்சி இது. அண்மையில் வடகொரியா, 1000 கி.மீ தூரம் சென்று தாக்கும் 4 ஏவுகணைகளை திடீரென பரிசோதித்து உலகையே பீதிக்குள்ளாக்கியது.

இந்த ஏவுகணைகள், ஜப்பானின் பொருளாதார மையங்கள், தென்கொரியாவின் நகரங்களை தாக்குவதற்கான வடகொரியாவின் முன்னேற்பாடு என ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் பயத்தில் ஒன்றுசேர அலறியுள்ளனர்.