மரணம்அடித்துச் சாத்திய கதவில் உயிரோடு அறையப்பட்டவண்ணத்துப்பூச்சி! பா.விஜயராமன்,
வடபாதிமங்கலம்.
ஞாபகம்பத்து வருடங்களுக்குமுன்எடுக்கப்பட்ட புகைப்படங்களைஎப்போது பார்த்தாலும்குழுவினரிலிருந்து சரியாய்அப்பாவை அடையாளம் காட்டிடயார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்இரண்டு வயதுக் குழந்தைக்கு?ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை&90.
மாரிக்காலம்!ஒவ்வொரு மாரிக்காலமும்தொடங்குகிறது,பள்ளிக்கூட நோட்டில்நடுப்பக்கம் கிழித்துகப்பல் செய்துவிடும்சிறுவர்களோடு! பெ.பாண்டியன், காரைக்குடி.
பக்திகோயிலில் வழக்கத்தைவிடகூட்டம் அதிகம்,காதலர் தினம்என்பதால்... பி.என்.ஜெயசங்கர்,
திருவாரூர்.
சுதந்திரம்ஒரு விரலசைப்பும்இரண்டு நெல்மணிகளும்தான்ஜோதிடக்கிளிகளுக்குசுதந்திரம் என்பது! கமருதீன், தஞ்சை.
மௌனம்மரத்தில்பறவைகளின் கூச்சலைக்கூடதாங்கிக்கொள்ள முடிந்தது!ஆனால் முடியவில்லைமரம் வெட்டப்பட்டஇடத்தில் நிலவும்மௌனத்தின் அலறலை! ப.உமாமகேஸ்வரி,
நெய்வேலி.
செயற்கைகிராமத்திற்குள்குடிபெயர்ந்த நகரங்கள்...ஃபிரிட்ஜிலிருந்துகுளிர்பான உபசரிப்பு! மலர்மகள், மதுரை.