காதல் ஸ்பெஷல் கவிதைகள் 5
காலை வெயில்மாலை பதனீர்மஞ்சள் மனம்மங்கள இசைஒளிபுகா கானகம்அடுத்தடுத்து சொல்கிற ‘ராஜாக்கு செக்’அதிகப்பிரசங்கி குழந்தைகளின் கேள்விகள்பரிசாக வந்த முத்துலிங்கம் புத்தகம்நெய்யில் வதங்கும் முருங்கை இலைகருணைக்கிழங்கு மசியல்முருங்கை மரத்து அணில்வேப்பமரக் காற்றுவடம் இழுக்கையில் கிடைக்கும் பானகம்அதிர்கின்ற வீணைஅசை போடும் மான்சரியும் முந்தானைவிரிகின்ற முல்லைமையிருட்டு காதலர்கள்சுடும் பகல் கனவுசுகமான உன் நினைவு!உன் கவலைகளும்நீ ஏற்படுத்தும் கவலைகளும்என் கவலைகளாக இருப்பதைக் கவனித்தாயா?!எனக்கான குயில்எல்லா இடங்களிலுமிருந்தும்பாடிக்கொண்டிருக்கிறது.நானோஉனக்கான பாடலோடு மன்றாடிக்கொண்டிருக்கிறேன்.காற்றைக் கிழித்துகாதில் நுழைகிறதுகுயிலோசைநீ என்னைக் கிழித்துஉன்னைச் செருகும் தருணங்களைநினைத்துக்கொள்கிறேன்.எங்கு சுவைத்தாலும்இனிக்கின்றபேய்க்கரும்புநீ!அன்பெனும்மதயானைஎதைக்கொண்டு அடக்கஎதைக்கொண்டு மறைக்க?!செல்வேந்திரன்
|