காதல் ஸ்பெஷல் கவிதைகள் 4



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

செடியிலிருந்து
பறித்து விட்டால்
வாடி விடுமென்று
யார் சொன்னது?
இங்கே பாருங்கள்
அவள் கூந்தலில்
சாய்ந்திருக்கிறது...
செடியிலிருந்ததை விட
உயிர்ப்பாய் பூ!

முத்தமிட
நெருங்கி வருகையில்,
இமைக் கதவுகளை
சட்டென
மூடிக் கொள்கிறாயே...
என்னை
உள் வைத்தா?
வெளித் தள்ளியா..?

உண்மையைச்
சொல்லட்டுமா..?
உன்னைப்
பிடித்திருப்பதால்தான்
உண்மையைப்
பிடித்திருக்கிறது.
மு.முருகேஷ்