அழகாக்கும் தோழி!



‘மீனவர் பிரச்னை பற்றிய பேச்சுவார்த்தைகள் எந்த மாயாஜாலத்தையும் நிகழ்த்தப் போவதில்லை என்பது கண்கூடு’ என நெத்தியிலடித்தது போல நிஜம் பேசியது உங்கள் கட்டுரை.


- கவியகம் காஜூஸ், கோவை.‘அஞ்சலி தந்த அதிர்ச்சி... படபடத்த ஸ்ருதி!’ என அட்டையிலேயே செம விறுவிறு. உள்ளே படித்தால் அதெல்லாம் வெறும் ‘போட்டோ ஷூட்’! அஞ்சலி தந்த ‘அதிர்ச்சி’யை விட குங்குமம் தந்த ‘அதிர்ச்சி’ ஓவரப்பா!

- மணிமாறன், திருவண்ணாமலை. தென்தமிழகத்தில் பிறந்த நாராயணன், சிவன் ஆகிய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியிலும் கொடி கட்டி... இல்லை, ராக்கெட் கட்டிப் பறப்பது கண்டு பெருமிதம் பொங்கியது!- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.‘அழகான பெண்களை அழகாக்குவது பக்கத்தில் இருக்கும் தோழிதான்’ என்பதை நிரூபித்து விட்டது ‘டமால் டுமீல்’ படத்தின் ரம்யா நம்பீசன் போட்டோ. சும்மாவா? டைரக்டர் ஸ்ரீ, ஷங்கரின் சீடராச்சே!

- எஸ்.உதயகுமார், மாத்தூர்.
‘இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றன’ என்ற புள்ளி
விவரமே திடுக்கிட வைத்தது. குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய அந்தக் கட்டுரை பெற்றோர் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை மணி!
- காந்தி லெனின், திருச்சி.

‘கணினி வழி மூன்றாம் உலகப் போர்’ கட்டுரை, இந்தியா இன்று சீரியஸாக சிந்திக்க வேண்டிய முக்கியமான செய்தியை முன்வைத்தது. இப்படியே போனால் தொழில்நுட்ப ரீதியாக நாம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற பயம் பிறந்தது.- எஸ்.பி.கனகவள்ளி, சேலம்.

இந்த ஸ்குவாஷ் விளையாட்டுக்கும் அழகான பெண்களுக்கும் அப்படி என்ன பொருத்தமோ! வரிசையாக நம் மனசை அள்ளிய பெண்களில் லட்சுமி ஸ்ருதிக்கும் ஒரு வார்ம் வெல்கம்!
- சரவணன், சென்னை-50

‘ஈக்கோ பாட்ஸ்’ மூலம் குப்பைகளை இயற்கை உரமாக்கி, காய்கறி செடிகளை வளர்க்கலாம் என நிரூபித்துள்ள டாக்டர் விஜயனுக்கும் அவர்
மகள் அபர்ணாவுக்கும் பாராட்டுகள்.

- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61.
சமூகப் போராளியான சுந்தரி, ‘அரசியலுக்கு சமரசம் தேவைப்படுது. நாங்க சமரசவாதியில்லை’ என்று சொல்வதிலேயே போராட்டத்தில் அவர் காட்டும் தீர்க்கம் தெரிகிறது.
- மா.மாரிமுத்து, ஈரோடு.

விஜய் இயக்கப் போகும் ‘சைவம்’ படத்தில் நாசரையும் அவர் மகன் பாஷாவையும் சுட்டிப் பெண் சாராவையும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
- மயிலை.கோபி, சென்னை-83.

மனுஷனோட பரிணாம வளர்ச்சியை ஆல்தோட்ட பூபதி சுட்டிக்காட்டிய விதம், வயிறு நோக சிரிக்க வைத்தது. ஆனாலும், காதலர்கள் மனம் நொந்து போற அளவுக்கா நோக வைக்கிறது?
- ஏ.பால்பாண்டி, சிவகங்கை.