குடடிசசுவா சிநதனைகள : ஆல்தோட்ட பூபதி





இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் செல்போன் பயன்பாடுகளைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியா, இந்தியாவுல யாரு வெட்டியா இருக்கான்னு தேடி, நம்ம குட்டிச்சுவரை கண்டுபிடிச்சு, சில விவரங்களைக் கண்டெடுக்கும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்தது. இதற்காக எல்லா மாநிலங்களுக்கும் சென்று நாம் செய்த ஆய்வில் கிடைத்த விவரங்கள் இங்கே...

இந்தியப் பெண்கள் ஒரு வருஷத்துக்கு சராசரியா 52459 மிஸ்டு கால் கொடுக்கிறாங்க. அதுல 88% தங்கள் காதலனுக்கே. 3% லேண்ட்லைன் போனுக்குக் கூட மிஸ்டு கால் தர்றாங்களாம். ஒரு வருஷத்துக்கு ஒவ்வொரு இந்திய ஆணும் சாராசரியா 32147 அழைப்புகளை மிஸ்டு கால் ஆக்குறாங்க. அதுல 93% அவங்கவங்க சம்சாரத்துகிட்ட இருந்து வரும் அழைப்புகள். மீதி 7% கடன்காரன்கிட்ட இருந்து வர்றது.

இந்திய ஆண்களில் 18% பேர், தங்களை கஸ்டமர் கேரிலிருந்து அழைத்த பெண்ணையே கரெக்ட் பண்ணி, காதலித்து, கல்யாணமும் செய்துள்ளார்கள்.

முக்கியமான போனுக்கு வெயிட் பண்றப்ப, ‘பேங்க் லோன் வேணுமா’, ‘செல் பில் கட்டுங்க’ன்னு போன் பண்ணி கடுப்பேத்தும் கால்களின் எண்ணிக்கை போன வருஷத்தை விட இந்த வருஷம் 3% அதிகமாகி இருக்கு.

சென்ற ஆண்டு, ஒரு நிமிடத்திற்கு ஒரு பெண்ணின் மெசேஜ் டைப் செய்யும் வேகம் 124 வார்த்தைகள். இந்த வருஷம் முன்னேறி 137 ஆகியிருக்கு.

சப்புன்னு அறைஞ்சா கூட சாந்தமா இருக்கும், ஆனால் செல்போன கேட்டால் கோபப்படும் ஆண்/ பெண்களின் எண்ணிக்கை இந்த வருஷம் 8% கூடியிருக்கிறது.



பேட்டரி குறையக் குறைய, சார்ஜரில் செல்போனை போட்டுக்கொண்டே கடலை போடும் பசங்களின் எண்ணிக்கை 14%, பெண்களின் எண்ணிக்கை 7% இந்த வருஷம் அதிகமாயிருக்கு.

ஆச்சரியம் தரும் வகையில், சொந்தமா தாங்களே செல்போன் ரீசார்ஜ் செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 0.20% அதிகமாகி இருக்கிறது, இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கிள்!

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய புரூடாராஜா பேசுகிறேன். தமிழ் இலக்கியம் அஞ்சு வகைப்படும் என நம் எல்லோருக்கும் தெரியும். தமிழ் சினிமா பாட்டு இலக்கியம் எத்தனை வகைப்படும் என்று உங்க யாருக்காவது தெரியுமா? வாருங்கள், உங்களை ஜாக்கெட் போட்ட மயிலோடும், ஜாக்கெட் போடாத குயிலோடும் என் தென்றல் வீசும் திரைக்கிராமத்திற்கு கூட்டிச் செல்கிறேன்.
தமிழ் சினிமா பாட்டு இலக்கியம் ஆறு வகைப்படும். 1) கனவு 2) கருத்து 3) கவலை 4) குஜால் 5) கும்மாளம் மற்றும் 6) குத்து

கனவு:
காதல் பாடல்கள் முக்கால்வாசி கனவு பாட்டிலக்கியத்தை சேர்ந்தவைதான். ஹீரோ பல்லு கூட விளக்காம ஹீரோயின் ஆட்டுக்குட்டிக்கு முத்தம் தரத பார்க்கிறப்போ, ரவுடிய அடிச்சு அவன் புடிங்கிட்டு போன தாவணிய திருப்பி தரப்போவெல்லாம் ஹீரோயின் இந்தப் பாடலைப் பாடுவாங்க.

நாமளோ, சினிமா படக்குழுவோ இதுவரைக்கும் சுத்திப் பாக்காத நாடுகள்லதான் பெரும்பாலும் இந்தப் பாட்டுகளை எடுப்பாங்க. பாதி மூஞ்சிய ஹீரோயின் ஒரு கையால மறைச்சுக்கிட்டு, மீதி பாதி மூஞ்சிய நமக்கு காமிச்சு நம்மளை பீதியடைய வைக்கிறது, ஒரே ஆங்கிள்ல முப்பது தடவை சிரிக்கிற காட்சிகள் எல்லாம் நிறையவே வரும். ஹீரோவும் ஹீரோயினும் ஒரே பாட்டுல கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்து, அதை ஸ்கூலுக்கு அனுப்பி, அதுக்கு குழந்தை பொறந்து, அதை ஸ்கூலுக்கு அனுப்பி, அதுக்கு ஒரு குழந்தை பொறந்து... சரி சரி, விடுங்க! அந்த டைப் பாடல்கள் கூட இதே இலக்கிய வகைதான்.

கருத்து:
ஹீரோ அறிமுகமாகறப்பதான் இந்தப் பாடல்களுக்கான ஸ்கோப் அதிகம். ‘அம்மாவ மறக்காத, உம்மாவ கொடுக்காத’, ‘தீண்டாமை கொளுத்து, திருவண்ணாமலை பஸ்ஸை மடக்கிக் கொளுத்து’, ‘ஃபிரண்ட் எல்லாம் பொறுக்கி புள்ள, எச்சக்கல திருட்டு புள்ள’ போன்ற அரிய வகை கருத்துக்கள் எல்லாம் இந்தப் பாடல்களில்தான் பொங்கி வழியும். கருத்துக்கு இடையில ‘தடுக்க முடியாதுடா, கொடுக்க முடியாதுடா, பறிக்க முடியாதுடா, எடுக்க முடியாதுடா’ன்னு அங்கங்க வார்த்தைகள் தூவினா, கைதட்டல் கன்ஃபார்ம். ஹீரோ ஏமாத்தப்படும் போதும், வீட்டை விட்டுத் துரத்தப்படும் போதும் பாடுற தத்துவ பாடல்களும் இந்த வகையை சார்ந்ததுதான்.

கவலை:
காதலி கழட்டி விடும்போதும், நண்பன் குவாட்டர்ல கட்டிங் தராம துரோகம் இழைத்திடும்போதும், இவன் இம்சை தாங்கலன்னு பெத்து வளர்த்த அம்மா செத்துவிடும்போதும் சினிமால இந்தப் பாட்டுக்கான சிச்சுவேஷன் அமையும். படம் பார்க்கிறவங்க பல பேரு போன் பேசவும், தம்மடிக்கவும் வெளிய போக உதவுறதுல இந்த வகைப் பாடல்கள்தான் முதலிடம் வகிக்கின்றன.

கும்மாளம்:
காலேஜ்ல குரூப்பா கூடி கும்மியடிக்கும்போது, கல்சுரல்ஸ் போது, ஊருல மஞ்ச தண்ணி திருவிழா, மாரியம்மன் திருவிழா, நாலு நண்பர்கள் / நண்பிகள் ஒண்ணா சேர்ந்து டூர் போறது இதெல்லாம் கும்மாளப் பாட்டிலக்கியத்துக்கான சிச்சுவேஷன். குடும்பம் கலக்காத கும்மாளப் பாடல்களின் முதல் செட் ப்ராபர்டியே சரக்கு பாட்டில்தான். ஃப்ளாஷ்பேக் சமயங்களில் நினைத்துப் பார்க்கவே சில படங்களில் கும்மாளப் பாடல்கள் வைப்பாங்க!

குஜால்:
ஹீரோவும் ஹீரோயினும் மரு வச்சுக்கிட்டு மாறு வேஷத்துல வில்லன் கோட்டைக்குள்ள ஆடுறது, ஆப்பிள் திராட்சைய படுக்கை மேல போட்டுட்டு ஃபர்ஸ்ட் நைட் பாடல்னு உருளுவது, மகாபலிபுர ரிசார்ட் ரூம்ல மழைக்கு ஒதுங்கிற மாதிரி ஒதுங்கி கசமுசா பண்றதெல்லாம் இந்த ரகம்தான். இந்தப் பாடல்கள் ஒலிக்கும்போதும், ஓடும்போதும், தியேட்டர்ல குண்டு வச்சிருக்குன்னு சொன்னா கூட நம்மாளுங்க எவனும் எந்திரிச்சுப் போக மாட்டானுங்க. சில சமயம் செகண்ட் ஹீரோயின் ஹீரோவ கரெக்ட் பண்ண இந்த வகைப் பாடல்களை யூஸ் பண்ணிக்குவாங்க.

குத்து:
குத்துப் பாட்டிலக்கியம் இரண்டு வகை... ஒண்ணு ஹீரோ, ஹீரோயின் ஆடுறது, இன்னொண்ணு கவர்ச்சிக் கன்னியின் ஐட்டம் டான்ஸ். பெரும்பாலும் க்ளைமேக்ஸுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடிதான் ஹீரோ - ஹீரோயின் ஆடும் குத்துப் பாட்டு வரும். இந்த இலக்கியத்தில் வார்த்தை கட்டுப்பாடு கிடையாது. ‘வாடி, போடி, கண்ணாடி ஜாடி, பைனாப்பிள் லேடி’னு ஆரம்பிச்சு, ‘குருவி கொடைஞ்ச கொய்யாப்பழமே, கொழுத்து விளைந்த பப்பாளி பழமே’னு இறங்கி அடிக்கலாம். கொஞ்சம் குண்டான ஆன்ட்டிக்கு புடவை கட்டி ஆட விடுறது, இதுல லேட்டஸ்ட் டிரெண்ட்!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
‘வாழ்க்கை என்பது மேடு பள்ளங்களால் ஆனது’ என்பதை, தன் புது ஹேர்ஸ்டைல் மூலம் உணர்த்தியிருக்கும் தலைவன் தோனியைக் கிண்டல் செய்யும் கிறுக்கர்கள் எல்லாரும்!