தத்துவம் மச்சி தத்துவம்





என்னதான் பேரரசு தான் எடுக்குற படத்துக்கு ஊர்ப் பெயரை வைத்தாலும், எந்த ஊருக்குமே அவர் பெயரை வைக்க முடியாது.
- ஊர் ஊராகச் சுற்றி உதவாத விஷயத்தை உளறுவோர் சங்கம்
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘‘கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்... இந்த ஊழல் சம்மந்தமான ஆவணங்களைத் திருடியவனுக்கு கை, கால் விளங்காமல் போய், நெஞ்சு வலி வந்து, மூச்சுப் பேச்சில்லாமல் ஒரே வாரத்தில் அவன் உயிர்...’’
‘‘வெவரம் புரியாம பேசாதீங்க தலைவரே... அதையெல்லாம் நீங்கதானே எடுத்தீங்க!’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.

‘‘என் பையனுக்கு இது முதல் திருட்டு... முதல் திருட்டுலயே போலீஸ்கிட்ட மாட்டிக்கக் கூடாது ஏட்டய்யா!’’
‘‘அதுக்காக இப்படி என் வீட்டுக்கு அவனை கூட்டி வந்து திருடச் சொல்றது ரொம்ப ஓவர் கபாலி...’’
- தேவதாசன், சொக்கம்பட்டி.

‘‘தலைவர் உணர்ச்சிவசப்பட்டு உளறிட்டாரா... என்ன சொன்னார்?’’
‘‘வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவேன்னு பேசிட்டார்!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.


‘‘என்னோட ட்ரீட்மென்ட்டைப் பத்தி கேள்விப்பட்டுதானே இங்கே வந்து அட்மிட் ஆனீங்க..?’’
‘‘இல்லே டாக்டர்! நர்ஸைப் பத்தி கேள்விப்பட்டு...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

என்னதான் பசுமாட்டுக்கு பாதாம் பருப்பை கரைச்சுக் குடுத்தாலும் அது மில்க்தான் குடுக்கும்; பாதாம் மில்க்கையெல்லாம் தராது!
- காராம்பசுவை வைத்து ஜோராக தத்துவம் சொல்வோர் சங்கம்
- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

‘‘அந்த ஆள் அநியாயத்துக்கு பொய் சொல்றான்னு எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றே..?’’
‘‘பாடி லாங்குவேஜை சரளமா எழுதப் படிக்கத் தெரியும்னு சொல்றானே..!’’
- சரவணன், கொளக்குடி.