கவிதைக்கார்கள்





உதவி
தெரியாத நபருக்கு செய்த உதவி
தெரியாமல் இருப்பதற்காக
தெரியாத நபரிடம்
தெரியாமல் கூட
சொல்ல வேண்டாம் என்று
தெரியாமல் சொல்லிவிட்டேன்
அந்தத் தெரியாத நபர்
யாருக்கும் தெரியாமல்
இருப்பதற்காக
அவருக்குத் தெரியாத ஊரில்
எனக்குத் தெரியாமல் குடியிருக்கிறார்
- கவி கண்மணி, கட்டுமாவடி.

அழுகை
அழும் குழந்தையை
சமாதானம் செய்ய
சில சமயங்களில் நானும்
அழ நேர்கிறது
- ஏ.மூர்த்தி,புல்லரம்பாக்கம்.


பயம்
வெட்டுண்ட ஆட்டுத்தலையின்
விரிந்த விழிகளில்
மரண பயம்!
- கி.ஹரிராவ்,கும்பகோணம்.

நட்பு
ஒற்றைப் புன்னகை
பெற்றுத் தந்தது
குழந்தையின் நட்பை!
- ச.கோபிநாத்,சேலம்.