பிளாஸ்டிக் மனிதன்!



இத்தாலியின் மிலன் நகரில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாபெரும் கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கலைப் பொருட்கள் மற்றும் வீட்டிலுள்ள பிளாஸ்டிக்கை வைத்து உருவாக்கப்பட்ட கலைப் பொருட்களைக் காட்சிக்கு வைத்தனர். அத்துடன் சுற்றுச்சூழல் நிபுணர்களின் சொற்பொழிவும் அரங்கேறியது.  

இந்தக் கண்காட்சியில் உலகப் பிரசித்தி பெற்ற பெருங்கலைஞர்களும் தங்களின் கைவண்ணத்தைக் காட்டி பாராட்டுகளை அள்ளினர். குறிப்பாக பியட் ஹெய்ன் ஏக் என்ற கலைஞர் கீபோர்டு, மவுஸ் உள்ளிட்ட கம்ப்யூட்டரின் பிளாஸ்டிக் உதிரிப்பாகங்களைக் கொண்டு ஒரு மனித உருவை உருவாக்கி இருந்தார்.‘எலெக்ட்ரானிக் மேன்’ என்று பெயரிடப்பட்ட இந்த பிளாஸ்டிக் மனிதன் பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்த பெரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினான்!

த.சக்திவேல்