பாகிஸ்தானின் முதல் இந்து பெண் நீதிபதி!
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் வெறுமனே 1.5% பேர் மட்டுமே இந்துக்கள். பெரும்பாலும் அரசின் உயர் பதவிகளில் இஸ்லாமியர்களின் ஆதிக்கமே அங்கு நிலவுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் வரலாற்றில் முதல் முறையாக சுமன்குமாரி என்ற ஓர் இந்துப் பெண் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 சிந்து மாகாணத்தில் உள்ள கம்பார்-ஷதட்கோட் பகுதியைச் சேர்ந்த சுமன்குமாரி. ஹைதராபாத்தில் எல்எல்பியை முடித்து, கராச்சி ஸாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் பயின்றவர். அத்துடன் பாகிஸ்தானில் நடந்த நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றே இந்த இடத்தை அவர் அடைந்திருக்கிறார்.
‘‘என் பகுதியில் உள்ள மக்களுக்கு சட்ட ரீதியான உதவிகள் நிறைய தேவை. அதனாலேயே நான் சட்டம் படித்தேன். ஆரம்பத்தில் சட்டம் படிக்க வேண்டும் என முடிவெடுத்தபோது என் சமூகத்தில் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என பயந்தேன். ஆனால், எனக்கு என் குடும்பம் பக்கபலமாக துணை நின்றது...’’ என்கிறார் சுமன்குமாரி.
த.சக்திவேல்
|