| கவிதை வனம் 
 
 
முத்தம் 
 குழந்தைக்கு
 நீ முத்தமிடுகிறாய்
 குழந்தையாகி
 அடம்பிடிக்கிறது மனம்.
 
 இது போதும் எனக்கு
 ரகசியம் சொல்வதாய்
 என் காதோரம் வந்து
 கொடுத்த கள்ள முத்தம்.
 
 முத்தம் உயிரின்
 பரிமாற்றம்
 வா பரிமாறுவோம்
 நம்மை நாம்.
 
 
 - முகம்மது சையது முஸ்தபா
  
 நிழல்
 
 நீரில் மரத்தின் நிழல்
 மீன் கொத்தியை
 கடித்துக்கொண்டிருக்கின்றன
 மீன்கள்.
 
 
 - நிரவி கஜேந்திரன் 
 
 |