கவிதை வனம்



முத்தம்

குழந்தைக்கு
நீ முத்தமிடுகிறாய்
குழந்தையாகி
அடம்பிடிக்கிறது மனம்.

இது போதும் எனக்கு
ரகசியம் சொல்வதாய்
என் காதோரம் வந்து
கொடுத்த கள்ள முத்தம்.

முத்தம் உயிரின்  
பரிமாற்றம்
வா பரிமாறுவோம்
நம்மை நாம்.

- முகம்மது சையது முஸ்தபா


நிழல்


நீரில் மரத்தின் நிழல்
மீன் கொத்தியை
கடித்துக்கொண்டிருக்கின்றன
மீன்கள்.

- நிரவி கஜேந்திரன்