பைக்கை மீட்க ஒரு கி.மீ சேசிங்!



ரோனி

சரக்கு அடித்துவிட்டு படுத்துவிடும் அப்பிராணிகளை விடுங்கள். தொண்டை வரை குடித்துவிட்டு அப்படியே  சாலையில் இறங்கி ஊருக்கே பீதி தரும் பிரகஸ்பதிகள் பற்றிய கதை உலகெங்கும் உண்டுதானே! கர்நாடகாவின் குடிமகன் ஒருவர் கூட செமபோதையானார். ஆனால், பரவசத்தில் என்ன செய்தார் தெரியுமா? மூக்குமுட்ட குடித்து பரவசம் தளும்ப தள்ளாடி வந்தவர், ட்ராஃபிக் போலீசின் பைக்கைப் பார்த்ததும் சிறிது கூட யோசிக்கவில்லை.  உடனே சாவி போட்டு எஞ்சினை உசுப்பி கிளப்பிவிட்டார்;



அதுவும் பைக்கின் மீதிருந்த போலீசின் தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு! உடனே குடிமகனை சேஸ் பண்ணிப்போனால், ஏறத்தாழ 1 கி.மீ போய் வளைத்துத்தான் பைக்கை மீட்டிருக்கிறார் பரிதாப போலீஸ்காரர். ஆனால், குடிபோதை பரவசத்தில் கர்நாடக மனிதர் சிரிப்பதை நிறுத்தவேயில்லை. அதுதான் ஊரே சிரிச்சிருச்சே!