பிரதமரால் நின்றுபோன திருமணம்!



ரோனி

வரதட்சணை, கலர் கம்மி, வசதி இல்லை, மாப்பிள்ளை கேரக்டர் சரியில்லை... என திருமணம் நின்று போக காரணங்களை அடுக்கலாம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் ஒரு திருமணம் நின்றுபோக காரணம் பிரதமர் மோடி என்றால் நம்புவீர்களா? கான்பூரைச் சேர்ந்த பிஸினஸ் மனிதர், தொழில் ஹிட்டானவுடனே லைஃபில் செட்டிலாக திருமணம் செய்ய முடிவெடுத்தார். ஜாதகம், பஞ்சாங்கம் பார்த்து பெண்ணும் தயாராகி, கோயிலில் கல்யாணம் பற்றி பேச இரு வீட்டாரும் ஒன்று கூடினர்.



அப்போது பிரதமர் மோடியின் சீர்திருத்தங்களைப் பற்றி, புதிய இந்தியா தாமரையாக பூத்துவிட்டது என்கிற ரீதியில் மாப்பிள்ளை பேச - அரசு ஊழியரான மணமகளுக்கு பொறுக்க முடியாத கோபம். எரிச்சலில் பெண் இரண்டு வார்த்தைகள் சூடாகப் பேச, இருவருக்கும் முட்டிக்கொண்டது. பின் இந்த விவாதம் அப்படியே இரு சம்பந்திகளுக்கு ஷிப்ட் ஆக... கல்யாணமே நின்றுவிட்டது!