கன்னிப் பஞ்சம்!
சரோஜாதேவி பதில்கள்
கன்னிப் பஞ்சம்
* பருவமழை போக்கு காட்டுகிறதே? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. போக்கு காட்டுவதுதான் பருவத்தின் தன்மை. மடக்கிப் போடுவது உம்ம சாமர்த்தியம்.
* முதலிரவில் ஆப்பிள் வைக்கிறார்கள். மாம்பழம் வைப்பதில்லையே? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. வைச்சுட்டா மட்டும்?
* தூக்கணாங்குருவிக் கூட்டை பார்த்தால் என்ன தோன்றும்? - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். ஆணிடம் கேட்க வேண்டிய கேள்வியைப் பெண்களிடம் கேட்கப்படாது.
* தண்ணிப்பஞ்சம் எப்போ தீரும்? - என்.இன்பா, திருவண்ணாமலை. அடுத்து கன்னிப்பஞ்சமும் ஏற்படப்போவுதாம் ஓய். எப்படி சமாளிக்கப் போறீரு?
* பெண்ணைக் கண்டால் பேய் இறங்குமா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். பேயே பெண் மீதுதான் ஏறுகிறது.
|