ஆழம்தான்!



சரோஜாதேவி  பதில்கள்

* முன்பக்கம் தாராளமாக இருக்கும் பெண்களைப் பார்த்தால் என்ன தோன்றும்?
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
சுகமான சுமைகளை சுமக்கிறார்கள் என்று தோன்றும். ஆண்களைப் பொறுத்தவரை எடுப்பு, கவர்ச்சி தொடர்பானது. ஆனால், உயிரியல்ரீதியாக அது தாய்மையின் அடையாளம்.

* திறந்த மார்போடு குழந்தைக்கு பாலூட்டும் மாடல் அழகியின் படம், மலையாளப் பத்திரிகையில் வந்திருக்கிறதே?
- கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.
பொதுவாக பாலூட்டும் படங்கள் சர்ச்சைக்குள்ளாவதில்லை. அந்த மாடலுக்கு கல்யாணமும் ஆகலையாம், குழந்தையும் பிறக்கலையாம். விஷயம் கேள்விப்பட்ட பிறகு, ஒருமாதிரி கிளர்ச்சியாக இளவட்டங்கள் அந்தப் படத்தை பார்க்கிறார்களாம்.

* தமிழகத்தில் தாவணிப் பெண்களையே காணமுடியவில்லையே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
மாராப்பு அடிக்கடி விலகுகிறது என்று சுடிதாருக்கு மாறினார்கள். இப்போது துப்பட்டாவே போடுவதில்லை. நெஜமாவே பெண் மனசு ஆழம்தான். புரிஞ்சுக்கவே முடியாது.

* ஆணுக்கு சிக்ஸ்பேக் என்றால், பெண்ணுக்கு...?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
டூ பேக். அதுக்கே ஆண்கள் அரண்டு போறீங்க.

* வாசகர்களுக்கு ‘சம்மர் பரிசு’ ஏதேனும் உண்டா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
தந்துடுவேன்... தாங்குவீங்களா?