அந்த இடத்தில் வாங்கிய அடி!
‘மம்பட்டியான்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘மரகத நாணயம்’ உட்பட ஏராளமான படங்களில் முரட்டு வேடங்களில் நடித்து வந்த ஆதேஷ், ‘சவரக்கத்தி’யில் ‘அந்த’ இடத்தில் அடி வாங்கி காமெடியில் அதகளப்படுத்தியிருந்தார்.
‘தூறல் நின்னு போச்சு’ புகழ் சிவராமனின் கலை வாரிசு.‘‘வில்லத்தனமாகவே நடித்து வந்த எனக்கு ‘சவரக்கத்தி’ வேறொரு பரிமாணம் அளித்தது. என்னுடைய கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு மீடியாக்களும் சினிமா ஜாம்பவான்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
எனக்கு வாய்ப்பு கொடுத்த மிஷ்கின் சாருக்கும் இயக்குநர் ஜி.ஆர். ஆதித்யா சாருக்கும் என் நன்றி எப்போதும் இருக்கும்.என்னைப் பொறுத்தவரை மிஷ்கின் சார் நடமாடும் சினிமா லைப்ரரி. அவருடனான காம்பினேஷனில் நடித்ததன் மூலம் என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள முடிந்தது’’ என்று சொல்லும் ஆதேஷ் தற்போது ‘சீமத்துரை’, ‘பற பற’ உட்பட கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துள்ளார்.
- எஸ்
|