காந்தலே ருசி!
சரோஜாதேவி பதில்கள்
* கருப்பான பெண்கள்தான் எனக்கு அழகாகத் தெரிகிறார்கள்? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். காந்தலே ருசி என்கிற சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் உங்களுக்கு பாராட்டுகள்!
* சொர்க்கத்தின் கதவை எப்படித் திறப்பது? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. பூட்டு, பெண்ணிடம். சாவி, ஆணிடம். திறப்பது அவரவர் சாமர்த்தியம்.
* பெண்களின் மனசு ஆழமென்கிறார்களே...? - பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம். இல்லாவிட்டால் ஆண்கள் ஈஸியாக தூர் வாரிவிடுவீர்களே?
* காதல் போரில் வெற்றி யாருக்கு? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) மோதிக்கொள்கிறவர்கள் இருவருக்குமே இறுதியில் வெற்றிதான்.
* மனசு அலைபாயும் வயசு எது? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. அலையடிக்க கரை இருந்தால் போதும். எந்த வயசிலும் பாயலாம்.
|