பருவமழை!
சரோஜாதேவி பதில்கள்
* பெண்ணுக்கு அழகைத் தருவது மடிப்பா, மச்சமா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. மடிப்பில் மச்சம் இருந்தால் மேலும் அழகு.
* பருவமழை பொய்க்காமல் பெய்யுமா? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கு வருடம் முழுக்க ‘பருவ’மழைதானே?
* காமம் இல்லாமல் காதல் உண்டா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். காதல் இல்லாமலும் காமம் உண்டு.
* மாலைநேர மயக்கம் என்றால் என்ன? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) நிலவைக் கண்டதும் அல்லி மலர்வது இயல்புதானே?
* முத்தம் தரும்போது பெண்கள் ஏன் கண்களை மூடுகிறார்கள்? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். ஆண்களை குளோஸப்பில் காண்பதால் ஏற்படும் அச்சத்தால் இருக்கும்.
|