பருவமழை!



சரோஜாதேவி பதில்கள்

* பெண்ணுக்கு அழகைத் தருவது மடிப்பா, மச்சமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
மடிப்பில் மச்சம் இருந்தால் மேலும் அழகு.

* பருவமழை பொய்க்காமல் பெய்யுமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
‘வண்ணத்திரை’ வாசகர்களுக்கு வருடம் முழுக்க ‘பருவ’மழைதானே?

* காமம் இல்லாமல் காதல் உண்டா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
காதல் இல்லாமலும் காமம் உண்டு.

* மாலைநேர மயக்கம் என்றால் என்ன?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
நிலவைக் கண்டதும் அல்லி மலர்வது இயல்புதானே?

* முத்தம் தரும்போது பெண்கள் ஏன் கண்களை மூடுகிறார்கள்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
ஆண்களை குளோஸப்பில் காண்பதால் ஏற்படும் அச்சத்தால் இருக்கும்.