வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!



சரோஜாதேவி பதில்கள்

*நயாகரா - வயாகரா; ஒப்பிடவும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
முந்தையது அருவி, பிந்தையது கருவி.

*முதலிரவில் யார் முதலில் பேசவேண்டும்?
- ப.முரளி, சேலம்.
அதென்ன பேச்சுப் போட்டியா? இங்கே செயல்பாடுதான் சார் முக்கியம்.

*தொட்டில் பழக்கத்தை மாற்றவே முடியாதா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
கணேசன், இன்னமுமா விரல் சப்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

*இனிப்புக்கடை விளம்பரங்களில் பெரும்பாலும் பெண்களே நடிப்பது ஏன்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
பெண்ணின் அங்கங்களை இனிப்புப் பண்டங்களோடு ஒப்பிட்டு கவிதை எழுதும் நம்ம கவிஞர்களைத்தான் கேட்கணும்.

*காதலையும் கற்று மறக்கலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
காதலைக்கூட மறந்துவிட முடிகிறது. அதன் உபவிளைவான காமத்தை மறக்க முடியவில்லை என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

*காதலியின் தோழியும், மனைவியின் தங்கையும் அழகாய் தெரிவதின் ரகசியம் என்ன?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
எட்டாக்கனி கண்டிப்பாக இனிக்குமென்ற நம்பிக்கைதான்.

*கிரிக்கெட் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
- ஆர்.கார்த்திகேயன், சென்னை-102.
பேட், பால், ஸ்டம்ப் எல்லாம் வைத்து விளையாடும் விளையாட்டு என்று கருதுகிறேன்.

* உதட்டில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டமா?
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
உங்களுடைய அதிகபட்ச முயற்சி உதடுதானா? இன்னும் கொஞ்சம் டீப்பா யோசிச்சி கேள்வி கேளுங்க அண்ணே.

*‘ஒண்ணும் தெரியாத பாப்பா, ஒன்பது மணிக்கு போட்டுக்கிச்சாம் தாப்பா’ என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் சரோ?
- செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
வாயிலே விரலை வெச்சாகூட கடிக்கத் தெரியாத பாப்பா பாரு. பழமொழிக்கு அர்த்தம் தெரியாம நம்மளை கேள்வி கேட்குறாராம்.

*வாயுள்ள உள்ள பிள்ளை பிழைக்கும் என்கிறார்களே.. எப்படி?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ச்சீய்... ஒரு வயசுப் பொண்ணு கிட்டே இப்படியெல்லாமா டபுள்மீனிங்கில் கேள்வி கேட்பீங்க?