சம்பளம் பத்தலை!



சாண்டல்வுட் சங்கதி

சந்தனக்காடு பற்றியெரிகிறது. சமீபத்தில் பாவனா கன்னடத்தில் தயாரிக்கும் ‘நிருத்தரா’ படத்தின் பிரெஸ்மீட் ஒன்றில், அப்படத்தின் ஹீரோயின் ஐந்த்ரிதா ரே பொரிந்து தள்ளிவிட்டார். “உலகத்தில் எங்குமே நடக்காத அநியாயம் கன்னடத்தில்தான் நடக்கிறது. ஹீரோ வாங்கும் சம்பளத்தில் ஐந்து சதவிகிதம்தான் ஹீரோயினுக்கு கிடைக்கிறது.

கொஞ்சம் சம்பளத்தை கூட்டிக் கேட்டால் படத்திலிருந்தே தூக்கி விடுகிறார்கள்” என்று குமுறினார். ஐந்த்ரிதா பற்றவைத்த தீ கொழுந்துவிட ஆரம்பித்திருக்கிறது. மற்ற முன்னணி ஹீரோயின்களும் கைநிறைய சம்பளம் கொடுக்காவிட்டால் இனி படங்களை ஒப்புக் கொள்வதில்லை என்று சிண்டிகேட் போட்டு முடிவெடுத்திருக்கிறார்களாம். ஹீரோக்கள்தான் குழம்பிப் போயிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் தங்கள் சம்பளத்தில் தயாரிப்பாளர்கள் கைவைத்து விடுவார்களோ என்று வேறு அவர்களுக்கு அச்சம்.