அவலை நினைத்து உரலை...



சரோஜாதேவி பதில்கள்

* பெருசுகள் பலரும் அந்தக் காலத்து ‘அஞ்சரைக்குள்ள வண்டி’ மாதிரி வருமா என்று வெறுப்பேற்றுகிறார்களே! அப்படியென்ன விசேஷம் அந்தப் படத்தில்?
- சின்னராஜா, குற்றாலம்.

இப்போது U/A சான்றிதழ் பெறும் படங்களில் இருக்குமளவுக்குக்கூட ‘சரக்கு’ எதுவுமில்லை என்பதுதான் விசேஷம். பெருசுகளுக்கு அவலை நினைத்து உரலை இடித்துக் கொள்வதே வாடிக்கை.

* மச்சினிச்சி சமையல் மட்டும் மணப்பது ஏன்?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

அறியா ருசி ஆசையைக் கிளப்பும்.

*கனவுக்கன்னி சரோஜா, உங்க ‘அளவு’ என்ன?
- ச.கார்த்திக், சிங்காநல்லூர்

பிரும்மாண்டமா கனவு காணாதீங்க டியர். லிமிட்டெட் மீல்ஸ் சாப்பிடும் அளவுதான்.
* மெரீனா பீச்சில் வாலிபால் ஆடியதுண்டா?
- ப.முரளி, சேலம்.

ம்ஹூம். வாலிபபால் மட்டும்தான் ஆடத்தெரியும்.

*காதல் காய்ச்சலுக்கு மருந்து என்ன?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
வியர்க்க, விறுவிறுக்க வேலை பார்ப்பதே தலைசிறந்த மருந்து.