நிகிலா ஹேப்பி!



சினிமா ஹீரோயின், நிஜத்தில் கல்லூரி மாணவி என்று டபுள் ரோல் செய்பவர்கள் வரிசையில் இணைந்துள்ளார் நிகிலா. சசிகுமாரோடு இவர் ஜோடி சேர்ந்த ‘வெற்றிவேல்’ வசூல்மழை குவித்து வருவதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

“கேரளாவில் இருக்கும் கண்ணூரில் +2 படித்துக் கொண்டிருந்தபோது மலையாளத்தில் ‘லவ் 24 x 7’ படத்தில் நடித்தேன். அதைப் பார்த்துவிட்டுத்தான் தமிழில் ‘ஒன்பது குழி சம்பத்’ படத்தில் நடிக்க அழைத்தார்கள். ஆனால், இது வெளியாவதற்கு முன்பே ‘வெற்றிவேல்’ வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

பி.எஸ்சி பாட்டனி தேர்வு எழுதியிருக்கிறேன். அதன் ரிசல்ட்டைப் பார்த்து, கல்லூரியில் மேற்படிப்பை தொடர்வதா அல்லது முழுநேர நடிகையாக மாறுவதா என்று முடிவு எடுக்க வேண்டும்.எனக்கு தமிழ் சரளமாக வரும் என்பதால் தமிழில் நானே பேசுகிறேன். என் குரலும் இனிமையாக இருக்கிறது என்று பாடுவதற்கும் அழைக்கிறார்கள். கதையும், கேரக்டரும்தான் எனக்கு முக்கியம். வலுக்கட்டாயமாக கிளாமராக நடிக்க மாட்டேன்” என்று உறுதியாகச் சொல்கிறார் நிகிலா.

- ராஜ்