சீரான உடலுக்கு சிறுதானியம்



சர்வேஷ்வரன் உணவக நிர்வாகம் (Hotel Management) தொடர்பான கல்வி பயின்று தொடர்ந்து பத்தாண்டுகளாக இத்துறையில் இயங்கி வருகிறார். சென்னை தி.நகரில் உள்ள “கிரீன் கஃபே” மற்றும் பெசன்ட் நகரில் உள்ள “க” உணவகம் இவற்றில் தலைமை சமையல் கலைஞராகவும் அதன் மேலாளராகவும் உள்ளார். நாம் மறந்துபோன நம்முடைய பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுதானியத்தில் செய்யக் கூடிய பலவகை உணவுகள் மற்றும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளால் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த இணைப்பில் இவர் வழங்கியுள்ள அத்தனை உணவுகளும் சிறுதானியங்கள் மற்றும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் செய்முறை. இவை உடலுக்கு வலு சேர்ப்பதுடன், மிகவும் ஆரோக்கியம் தருபவை.

எழுத்து வடிவம்: கலையரசி
தொகுப்பு: ருக்மணி நாகராஜன்

சீ.சர்வேஷ்வரன்
சமையல் கலைஞர்