தோழிகளுக்கான ராசி பலன் நவம்பர் 1 முதல் 15 வரை





மேஷம்
பண வரவு நிச்சயம் உண்டு. கன்னியருக்குத் திருமணம் கூடி வரும். வெள்ளிக்கிழமைகளும் 6, 15 தேதிகளும் சுபகாரியங்கள்  முடிவு செய்ய, சொத்து, வாகனம் வாங்க, புதுத் தொழில் தொடங்க ஏற்றவை. செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கா ஸ்தோத்திரம் படித்தால் பிள்ளைகளுக்குப் பிரச்னை ஏற்படாது. அரசியலில் இருக்கும் பெண்களுக்கு பகைவர்களால் சிக்கல் நேராது. ஆரோக்கியம் சீராயிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரரையும் விநாயகரையும் வழிபட்டால் பொருள் நஷ்டம் ஏற்படாமலிருக்கும். வியாழக்கிழமைகளில் குருவை வணங்கினால் தொழில் தொடர்பான கவலை அகலும்.
சந்திராஷ்டம நாட்கள்: 4ம் தேதி மாலை 5:30 மணி முதல் 6ம் தேதி இரவு 8:44 மணி வரை எச்சரிக்கையுடன் செயல்படவும்.
சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 3, 4ம் தேதி மாலை 5:00 மணி வரை, 9, 10, 11, 12, 15ம் தேதி (காலை 10:45 மணி முதல் அன்று முழுவதும்)களில் சந்திரன் தீய கிரகங்களின் தாக்கத்தைத் தடுப்பார்.



ரிஷபம்

ஆரம்பித்த காரியம் வெற்றியாக முடியும். பண வரவு செழிப்பாயிருக்கும். எதிரிகள் ஒடுங்குவர். கன்னியருக்குத் திருமணம் நிச்சயமாகும். தொழிலாளர் பிரச்னை நீங்கும். சிலர் வீடு, நிலம் வாங்குவார்கள். வியாதி குணமாகும். தைரியமும் நட்பு மனமும் கொண்டு காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமண்யரையும் 7ம் தேதி விக்னேஸ்வரரையும் வழிபட்டால் கவலைகள் நெருங்காது. 1, 3, 4, 5, 6, 8, 10, 12, 13, 14, 15 தேதிகளும், ஞாயிறு, புதன், வியாழன், சனி, வெள்ளிக்கிழமைகளும் சுபகாரியங்கள் நடத்த, வீடு, நிலம், வாகனம் வாங்க, புதுமுயற்சிகளுக்கு அதிர்ஷ்டமானவை.
சந்திராஷ்டம நாட்கள்: 6ம் தேதி இரவு 8:44 மணி முதல் 8ம் தேதி இரவு 11:00 மணி வரை கவனமாகச் செயல்படவும்.
சந்திர அனுகூல தினங்கள்: 2ம் தேதி மதியம் 1:00 மணி முதல் 3, 4, 5, 6, 11, 12, 13, 14 தேதிகளில்
சந்திரன் நன்மைகள் தருவார்.



மிதுனம்

புகழ் கூடும். அதிகாரம் நிறைந்த பதவி கிடைக்கும். வீடு, நிலம் சேரும். பண வரவு கணிசமாக இருக்கும். உடல்நிலை சீராகும். மற்றவருக்குச் சேர வேண்டிய அதிர்ஷ்டம் உங்களை வந்தடையும். திட்டமிட்டபடி காரியங்கள் முடியும். கன்னியருக்கு விவாகம் கைகூடும். சுபகாரியம் முடிவு செய்ய, சொத்து, வாகனம், ஆபரணம் வாங்க, புதுத்தொழில் தொடங்க செவ்வாய்க்கிழமைகளும் 7, 9 தேதிகளும் அனுகூலமானவை. சனிக்கிழமைகளில் சனீஸ்வரரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதவனையும் வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியையும் வழிபட்டால் பொருள் இழப்பும் பிள்ளைகளால் பிரச்னையும் ஏற்படாது.
சந்திராஷ்டம நாட்கள்: 8ம் தேதி இரவு 11:00 மணி முதல் 10ம் தேதி இரவு 2:00 மணி வரை கவனம் தேவை.
சந்திர அனுகூல தினங்கள்: 6, 7, 8, 13, 14, 15 தேதிகளில் மற்ற கிரகங்களினால் பாதிப்பு இருக்காது.



கடகம்
பண வரவு கொழிக்கும். சுற்றத்தினரோடு நெருங்கிய தொடர்பு உண்டாகும். புதன் கிழமைகளும் 5, 14 தேதிகளும் வீடு, நிலம், வாகனம் வாங்க, புதுமுயற்சிகளுக்கு, சுப
காரியங்கள் நடத்த ஏற்றவை. செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் அரசு சம்பந்தமான சிக்கல்கள் தீரும், சண்டைகள் இருக்காது. ஆரோக்கியக் குறைபாடும் ஏற்படாது. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் சனிக்கிழமைகளில் சனிபகவானையும் கணபதியையும் வணங்கினால் கவலைகள் காற்றாகப் பறந்து போகும்.
சந்திராஷ்டம நாட்கள்: 10ம் தேதி இரவு 2:00 மணி முதல் 13ம் தேதி அதிகாலை 5:15 மணி வரை எதிலும் எச்சரிக்கை தேவை.
சந்திர அனுகூல தினங்கள்: 1, 2ம் தேதி மதியம் 12:55 மணி வரை, 7, 8, 9, 10, 15ம் தேதி காலை 10:46 மணி முதல் சந்திரன் பக்க பலமாக இருப்பார்.



சிம்மம்
செல்வாக்குப் பெருகும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். உறவினர்களும் தோழமையும் உதவியாக இருப்பார்கள்.
கன்னியருக்குக் கல்யாணம் நிச்சயமாகும். பண வரவு கட்டாயம் உண்டு. பகைமை நிர்மூலமாகும். சிலருக்குப் பதவியும் சிலருக்குப் பதவி உயர்வும் கிடைக்கும். சிலர் வீடு கட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் வெற்றியாக முடியும். தொலைந்தவை கிடைக்க வாய்ப்புண்டு. வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளும் 1, 3, 4, 6, 8, 10, 12, 13, 15 தேதிகளும் சுபகாரியங்கள் முடிவு செய்ய, வீடு, நிலம், வாகனம் வாங்க, புதுத்தொழில் ஆரம்பிக்க ஏற்றவை.
செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் 7ம் தேதி கணேசரையும் வழிபட்டால் பண விரயமோ, வீண் அலைச்சலோ ஏற்படாது.
சந்திராஷ்டம நாட்கள்: 13ம் தேதி அதிகாலை 5:15 மணி முதல் 15ம் தேதி காலை 10:46 மணி வரை விழிப்புடன் செயல்படவும்.
சந்திர அனுகூல தினங்கள்: 2ம் தேதி மதியம் 1:00 மணி முதல் 3, 4ம் தேதி மாலை 5:25 மணி வரை, 9, 10, 11, 12 தேதிகளில் சந்திரன் பல நன்மைகள் செய்வார்.



கன்னி
ஆற்றல் பெருகும். பிரிந்தவர் கூடுவர். சுப
காரியங்கள் நடத்த, சொத்து, வாகனம்,
ஆபரணம் வாங்க, புது முயற்சிகளுக்கு
வெள்ளிக்கிழமைகளும் 6, 15 தேதிகளும் சாதகமானவை. சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், கணேசரை வழிபட்டால் பொருள் நஷ்டம் ஏற்படாது. ஆரோக்கியக் குறைபாடு உண்டாகாது. செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமண்யரை வணங்கினால் சக தோழிகளுடன் சச்சரவு ஏற்படாது.
வியாழக்கிழமைகளில் குருவையும் புதன்கிழமைகளில் பெருமாளையும் வழிபட்டால் தொழிலில் பிரச்னை ஏற்படாது.
சந்திராஷ்டம நாட்கள்: 15ம் தேதி காலை 10:46 மணி முதல் அன்று முழுவதும் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
சந்திர அனுகூல தினங்கள்: 2, 3ம் தேதி மதியம் 12:55 மணி வரை, 4ம் தேதி மாலை 5:15 மணி முதல் 5, 6ம் தேதி இரவு 8:44 மணி வரை, 11, 12, 13, 14 தேதிகளில் சந்திரனால் நன்மைகள் உண்டு.



துலாம்
திறமையும் கௌரவமும் கூடும். ஆரம்பித்த காரியம் லாபமாக முடியும். தனலாபம் செழிப்பாக இருக்கும். அதிகாரம் நிறைந்த பதவி கிடைக்கும். எதிரிகள் அடங்கியிருப்பர். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கைகூடும். சிலர் சொத்துக்கு அதிபதியாவார்கள். சுபகாரியங்கள் நடத்த, வீடு, நிலம், வாகனம் வாங்க, புது முயற்சிகளுக்கு 3, 6, 9, 12, 15 தேதிகளும், செவ்வாய், வியாழன்,
வெள்ளிக்கிழமைகளும் சிறப்பானவை. சனிக் கிழமைகளில் சனீஸ்வரர், விக்னேஸ்வரரை வழிபட்டால் பண விரயமோ, உறவினரைப் பிரியவோ நேராது. புதன்கிழமைகளில் பெருமாளை வணங்கினால் மனக்குறை அகலும்.
சந்திராஷ்டம நாட்கள்: இல்லை.
சந்திர அனுகூல தினங்கள்: 2ம் தேதி மதியம் 1:00 மணி முதல் 3, 4ம் தேதி மாலை 5:15 மணி வரை, 7, 8, 13, 14, 15 தேதிகளில் சந்திரன்
காப்பாற்றுவார்.



விருச்சிகம்
லாபம் அமோகமாக இருக்கும். செல்வந்தர்களின் நட்புக் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கூடிவரும். விரோதிகள் ஒடுங்குவர். வியாதி குணமாகும். சுபகாரியங்கள் முடிவு செய்ய, சொத்து, வாகனம் வாங்க, புது முயற்சிகளுக்கு 6, 7, 15 தேதிகளும் வெள்ளிக்கிழமைகளும் அதிர்ஷ்டமானவை. வியாழக்கிழமைகளில் குருவையும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரரையும் 4, 13 தேதிகளில் துர்க்கையையும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈஸ்வரனையும் வழிபட்டால் கஷ்ட, நஷ்டங்கள் ஏற்படாது. சண்டை, வம்புகளைத் தவிர்க்கலாம்.
சந்திராஷ்டம நாட்கள்: இல்லை.
சந்திர அனுகூல தினங்கள்: 1, 2ம் தேதி மதியம் 12:55 மணி வரை, 4ம் தேதி மாலை 5:15 மணி முதல், 5, 6, 9, 10 தேதிகளில் சந்திரன் துணை இருப்பார்.



தனுசு
சிறப்பான இனிய அனுபவங்கள் ஏற்படும். நூதன சாதனங்கள் சேரும். சிலருக்கு வேலையும் சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். சிலர் வாகனம் வாங்குவார்கள். மாணவிகள் சாதனை படைப்பர். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். தெளிவான சிந்தனையும், சாதுரியமான சொல்லாற்றலும் கொண்டு வெற்றிகளை அடைவீர்கள். புகழ் அதிகரிக்கும். எடுத்த காரியம் சுபமாக முடியும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். சிலருக்கு வாரிசுகளாலும் சிலருக்கு தோழமையாலும் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியம் சீராக இருக்க, வீண் அலைச்சல் வராமலிருக்க, பிள்ளைகளால் பிரச்னை ஏற்படாமலிருக்க செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் 7ம் தேதி விக்னேஸ்வரரையும் வழிபடவும்.
சந்திராஷ்டம நாட்கள்: இல்லை.
சந்திர அனுகூல தினங்கள்: 1, 2, 3, 4, 7, 8, 11, 12 தேதிகளில் சந்திரன் நன்மைகள் செய்வார்.



மகரம்
பண வரவு கணிசமாக இருக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பகைவர் தொல்லை இருக்காது. வீடு, நிலம் வாங்க, சுபகாரியங்கள் முடிவு செய்ய, புது முயற்சிகளுக்கு புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளும் 1, 5, 6, 10, 14, 15 தேதிகளும் லாபகரமானவை. வியாழக்கிழமைகளில் குருவையும் செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், பிள்ளையாரையும் வழிபட்டால் பண விரயமோ, கெட்ட பெயரோ ஏற்படாது. சண்டை, சச்சரவுகளைத் தவிர்த்துக்
கொள்ளலாம்.
சந்திராஷ்டம நாட்கள்: இல்லை.
சந்திர அனுகூல தினங்கள்: 2ம் தேதி மதியம் 12:55 மணி முதல் 3, 4, 5, 6, 9, 10, 13, 14, 15ம் தேதி காலை 10:46 மணி வரை சந்திரன் துணையாக இருப்பார்.



கும்பம்
மகிழ்ச்சி பெருகும். தோழிகளோடு விழா, விருந்துகளில் பங்கெடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.
கன்னியருக்கு விவாகம் கூடிவரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலர் வாகனம் வாங்குவார்கள். மாணவிகள் சிகரம் தொடுவார்கள். சிலர் பட்டாடை, ஆபரணம் வாங்குவர். எதிரிகள் ஒடுங்குவர். சிலருக்குப் பதவி மாற்றம் உண்டாகும். சிலர் வீடு வாங்குவார்கள். சுபகாரியங்கள் நடத்த, புதுத் தொழில் தொடங்க, வியாழன், வெள்ளிக்கிழமைகளும் 3, 6, 7, 12, 15 தேதிகளும் அனுகூல மானவை. செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமண்யரையும் சனிக்கிழமைகளில் சூரியனையும் வழிபட்டால் பண நஷ்டமோ, ஆரோக்கியக் குறைபாடோ ஏற்படாது. குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: 1ம் தேதி அதிகாலை முதல் 2ம் தேதி மதியம் 12:55 மணி வரை கவனம் தேவை.
சந்திர அனுகூல தினங்கள்: 5, 6, 7, 8, 11, 12 தேதிகளில் சந்திரன் சாதகமான பலன்களை தருவார்.



மீனம்
நினைத்தது நடக்கும். பிள்ளைகளால் லாபம், பண வரவு உண்டு. புத்தாடைகள் கிடைக்கும். மாணவிகளுக்குப் புகழ் கூடும். தைரியமும் நேச மனப்பான்மையும் கொண்டு காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். சண்டைகள் சமாதானமாகும். செவ்வாய், புதன்கிழமைகளும் 5, 9, 14 தேதிகளும் சுபகாரியங்கள் முடிவு செய்ய, சொத்து, வாகனம் வாங்க, புதுத் தொழில் தொடங்க ஏற்றவை. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், விநாயகரையும் 4, 13 தேதிகளில் துர்க்கையையும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈஸ்வரனையும் வழிபட்டால் மனசஞ்சலமும் பொருள் இழப்பும் ஏற்படாது.
சந்திராஷ்டம நாட்கள்: 2ம் தேதி மதியம் 12:55 மணி முதல் 4ம் தேதி மாலை 5:30 மணி வரை ஜாக்கிரதையாகச் செயல்படவும்.
சந்திர அனுகூல தினங்கள்: 2, 3ம் தேதி மதியம் 12:55 மணி வரை, 7, 8, 9, 10, 13, 14, 15ம் தேதி காலை 10:46 மணி வரை சந்திரன் மற்ற கிரகங்களின்
பாதிப்பைக் குறைப்பார்.