வைரல் சம்பவம்



அமெரிக்காவின் மிசிசிபி சாலை. அதன் ஓரத்தில் தூக்கி வீசப்பட்ட பழைய ஷோபா ஒன்று வெகு நாட்களாகக் கிடந்துள்ளது. கைவிடப்பட்ட நாய் ஒன்று அந்த ஷோபா மீது ஏறி படுத்துவிட்டது. அதன் முகத்தில் எஜமானருக்காக காத்திருக்கும் சோகமும், பசியும். இரண்டு நாட்களாக அந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகரவில்லை.

பசியால் அதன் உடல் ஒடுங்கிப் போயிருந்தது. இந்த சோகக் காட்சியை சாரோன் என்பவர் புகைப்படமெடுத்து, இணையத்தில் தட்டிவிட ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் விட்டு, விலங்குகள் நல வாரியத்திடம் தகவலைச் சொல்லியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் வைரலாகிவிட்டது.