வண்ண நதி



பூமியில் மிக அழகான இடங்களில் ஒன்று கானோ கிறிஸ்டல்ஸ் நதி. நூறு கிலோமீட்டர் நீளமுடையது. கொலம்பியாவில் பாயும் இந்த நதிக்குள் அழகழகான செடிகள் துளிர்க்கின்றன; பூக்கள் மலர்கின்றன.
அதனால் இந்த நதியில் பாய்கின்ற நீர் மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு என பல வண்ணங்களில் காட்சி யளிக்கிறது. அதனாலேயே இதை ‘வானவில் நதி’ என்றும் அழைக்கின்றனர்.

கரடு முரடான பாறை களுக்கு உள்ளேயும் நடுவிலும் பாய்கின்ற இந்த நதியை காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகை புரிகின்றனர். நதி பாய்கின்ற பாறைகள் எல்லாம் 1.2 பில்லியன் வருடங்களுக்கு முந்தை யவை என்று தொல்லியலாளர்கள் சொல்கின்றனர்.

‘‘மனிதனாகப் பிறந்தவர்கள் இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 100 இடங்களில் இந்த நதியும் ஒன்று...’’ என்கிறது பிபிசி. குறிப்பாக ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த நதியின் அழகைக் கண்டு ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.