ஒரு, ஓர் - எது சரி? எது தவறு?



தமிழ் வலம்

சென்ற வாரம் கேட்ட கேள்வி:


அது ஓர் அழகிய கிராமம்ராமன் என்றோர் மானுடன்‘இந்த இரண்டு வாக்கியங்களில் எது சரி, எது தவறு?’ என்று கேட்டிருந்தோம்.

உண்மையில் இந்த வாக்கியங்களின் கருத்திலும் எந்தப்பிழையும் இல்லை. ஆனால், எழுத்தில் பிழையுள்ளது.   தமிழில் எந்த இடத்தில் ‘ஒரு’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். எந்த இடத்தில் ‘ஓர்’ என்ற சொல்லைப் பயன் படுத்த வேண்டும், என்பதற்கு விதிமுறை உள்ளது.பொதுவாக, உயிர் எழுத்துகளில் தொடங்கும் ஒருமைச் சொற்கள் வரும்போது ‘ஓர்’  என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள்.

ஓர் அரசன், ஓர் ஆடு, ஓர் இலை போன்றவை உதாரணங்கள். உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் ஒருமைச் சொற்களுக்கு ‘ஒரு’ என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். எ.கா: ஒரு நாடு, ஒரு விலங்கு.

‘அது ஓர் அழகிய கிராமம்’ என்பது சரி. அதுபோலவே ‘ராமன் என்று ஒரு மானுடன்’ என்பதே சரி. சரியான பதிலை சொன்னவர்களுக்கு சபாஷ். இந்தவாரம் ஒரு கேள்வி…‘முதலையும்  மூர்கனும் பிடித்தால் விடா’ இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன?

-வலம் வருவோம்

இளங்கோ