டியர் டாக்டர்
‘விளைநிலங்கள் விஷமானால்’ கட்டுரை படித்தேன். அமெரிக்கா நமது விளைநிலங்களை அழிக்கவும், விஷமாக்கவும் பல்வேறு சதிகளை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. நமது நாட்டின் விளைநிலங்கள் அழிக்கப்பட்டால், அடிப்படையான தேவையான உணவுக்கே, அவர்கள் கையை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
 இதன் அவசியம் உணர்ந்து நமது மக்கள் விளைநிலங்களை காக்கவும், ரியல் எஸ்டேட் ஆட்களுக்கு விற்காமலும் இருப்பது அவசியம். விளைநிலங்களை விற்காமல் யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களே எதிர்காலத்தின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். கட்டுரையை சிறப்புற எழுதிய செய்தியாளர் ஞானதேசிகனுக்கு என்னுடைய வாழ்த்துகள்! - .சத்யா (இசையமைப்பாளர்)
தனியார் மருத்துவமனைகள் என்றாலே ஓட்டம் பிடிக்கும் அப்பாவி நோயாளிகளது எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலை இது. டாக்டர் ராமமூர்த்தி, டாக்டர் ஜெயச்சந்திரன் போன்ற டாக்டர்கள் உயிர்காக்கும் மருத்துவத் தொழிலின் புனிதத்தைக் காக்கும் வகையில் மருத்துவ சேவை புரிந்து வருவது மிகுந்த ஆறுதலைத் தருவதாக அமைந்திருந்தது. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
தாவரவியல் குறிப்புகள்... தீர்க்கும் நோய்கள்... பயன்படுத்தும் வழிமுறைகள்... இப்படி அற்புத மூலிகை அதிமதுரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் அறியப்பட வேண்டியவை... பயனுள்ளவை... அடுத்த இதழை ஆவலுடன் எதிர்பார்க்க வைப்பவை!
- பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி மற்றும் மகாலட்சுமி, சென்னை-78.
‘சாப்பிடுவது எப்படி?’ என்று கூறுகிறார்களே... அது கூடவா நமக்கு தெரியாது என்று முதலில் யோசித்தாலும், பிறகு முழு கட்டுரையை படித்த பிறகுதான் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. அற்புதமான கட்டுரை! - வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
ப்ரிஸ்க்ரிப்ஷன் பகுதியில் டாக்டர் அருணாசலம் தரும் தகவல்கள், சுய மருத்துவம் ெசய்து கொள்கிறவர்களுக்கான அவசிய எச்சரிக்கை. - தேவிபாலாஜி, லதா இம்மானுவேல், சென்னை-15.
|