மரபணுக்கள்



புல், செடி, புறா, நீங்கள், நான், உங்கள் வீட்டு நாய்க்குட்டி என ஒவ்வொரு உயிரினமும் தனித்துவம் கொண்ட படைப்புதான். அதேவேளையில், ‘ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றின் தொடர்ச்சியே’ என்கிறார் பரிணாமத்தின் தந்தையான சார்லஸ் டார்வின். குரங்கிலிருந்து மனிதன் என்ற டார்வினின் பரிணாமத் தத்துவம் இதையே வலியுறுத்துகிறது.

டார்வினின் காலமான அதே 18ம்நூற்றாண்டில், இந்த உண்மையை வேறு ஒரு கோணத்தில் கூறினார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிரிகர் ஜோஹன் மெண்ெடல்.
‘குரங்கு - மனிதன் என்பதெல்லாம் பெரிய கணக்கு. ஒரு பட்டாணி செடிக்கும் அதன் அடுத்த தலைமுறைக்குமே பெரிய சம்பந்தம் உண்டு. எத்தனை அடி உயரம் வளர
வேண்டும், எப்படி காய்க்க வேண்டும், இலைகளின் தன்மை என்ன என்பதையெல்லாம் முந்தைய தலைமுறையே தீர்மானித்துவிடுகிறது. இது மரபணுக்களின் திருவிளையாடலே’ என்று கூறினார் மெண்ெடல்.

இயல்பிலேயே இயற்கை மீது ஆர்வம் கொண்ட மெண்ெடல், தன்னுடைய தோட்டத்தில் விளைந்த பட்டாணி செடிகளைக் கவனித்தபோதே இந்த மரபணுக்கள் (Genes) விஷயத்தைக் கண்டுபிடித்தார்.‘இந்த மரபணுத் தத்துவம் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய சந்ததியின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகுந்த செல்வாக்கு செலுத்துகிறது’ என்ற மெண்ெடலின் கருத்துகளை வழக்கம்போல் மற்ற விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

கி.பி. 1900ம் ஆண்டு ஹியூகோ டி வ்ரிஸ், கார்ல் காரன்ஸ் மற்றும் எரிக் வான் என மூன்று ஆய்வாளர்கள் மெண்ெடலின் மரபணுத் தத்துவம் உண்மையே என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தார்கள். எல்லா உயிரினங்களும் செல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிரில்லியன் கணக்கில் அமைந்திருக்கும் இந்த செல்களுக்குள் புரதமாக மரபணுக்கள் அடங்கியிருக்கின்றன என்று சொன்னார்கள்.

‘அப்பாவைப் போலவே மகனும்’, ‘என்ன இருந்தாலும் நம்ம ரத்தம்’ என்று மெண்ெடலின் விதிகளையே வேறு விதத்தில் இப்போது நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒருவர் சிவப்பாகவோ, உயரமானவராகவோ இருப்பதற்கெல்லாம் மரபணுக்களே காரணம்.`ஒருவரின் குணநலன்களும், உடலமைப்பும் அப்பா, தாத்தாவிடமிருந்து கிடைக்கிறது என்பதெல்லாம் ஊரறிந்த ரகசியம். இதனால் நமக்கு என்ன லாபம்? என்ற கேள்வி நமக்கே தோன்றும்போது, விஞ்ஞானிகள் சும்மா இருப்பார்களா?

முந்தைய தலைமுறையிடமிருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, மைனஸ் சமாசாரங்களை தவிர்ப்பதற்காக மரபணுக்களை ரிப்பேர் செய்யும் வேலையை Genetic engineering என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கெனவே தாவரங்கள், விலங்கினங்களில் இந்த முறை விஞ்ஞானிகளுக்கு ஓரளவு வெற்றியைத் தந்திருக்கிறது. அதே வழியில் மனிதர்களையும் ஆரோக்கியமானவர்களாக, சக்தி மிக்கவர்களாக உருவாக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.

- ஜி.வித்யா