கவிதைக்காரர்கள் வீதி



* உன் உதட்டுப் பள்ளத்தாக்கின்
ஓரமாய் உட்கார்ந்திருக்கிறேன்.
காதல் வார்த்தை சொல்வாயா?
இல்லை,
காக்க வைத்தே கொல்வாயா?

* உன்
பாதம் படாத ஏக்கத்தில்
வெளிறிப் போய்க் கிடக்கிறது
தாஜ்மகால்

* உனது வெட்கமும்
எனது தயக்கமும்
மோதிக் கொண்ட
ஒரு நாளில்தான்
இருவர் இதயமும்
தாக்குதலுக்குள்ளானது.
ஓடி வந்து முதலுதவி செய்தது
காதல்.

* விண்ணை வெறித்துப் பார்க்காதே,
உன் பார்வை ஈர்ப்பினால்
பூமிக்கு வந்துவிடப் போகிறது
மங்கள்யான்

* புதிதாக
சிறகு முளைத்திருக்கும்
பட்டாம்பூச்சியிடம்
கொஞ்சம் இமைத்துக் காட்டு
சிறகடிக்கக்
கற்றுக் கொள்ளட்டும்.

* உனக்காக பகலெல்லாம் உழைத்து
நட்சத்திர மூக்குத்திகளை
உருவாக்கி
இரவு நேரங்களில்
அறிமுகப்படுத்துகிறது வானம்.

ஆதி.சௌந்தரராஜன்