வாரம் 2 நாட்கள் மட்டுமே வேலை!
ஆம். ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை உலகம் முழுவதும் இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும்! இப்படிச் சொல்லியிருக்கிறார் மைக்ரோசாஃப்ட் உரிமையாளரான பில் கேட்ஸ்.ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும். இதனாலேயே வேலை நாள்களும் குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே காரணம் என அடிக்கோடிட்டு சொல்லியிருக்கிறார்.பல துறைகளிலும் ஏஐ தொழில் நுட்பம் இப்பொழுதே கோலோச் சத் தொடங்கிவிட்டது.
இப்போதைய ட்ரெண்டிங்காக இணையத்தில் கலக்கி வரும், ‘ஜிப்லி’ வகை கார்ட்டூன் சித்திர படங்களும் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் விளைவே.இப்படியே போனால் தொழில்நுட்பத்தை நம்பியே சுழலும் இந்த நவீன யுகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு குறைந்துவிடும் என்பதையே பிரதிபலிக்கிறது பில் கேட்ஸின் கருத்து.
காம்ஸ் பாப்பா
|