குஜராத் கொடூரம்!



குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனம் (எஸ்.எஸ்.ஜி.ஐ) செயல்பட்டு வருகிறது. மாணவிகள் இங்கு விடுதியில் தங்கி, பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கின்றனர்.

இங்கு விதிப்படி, பெண்கள் மாதவிடாய் காலத்தில், விடுதியிலிருக்கும் கோயிலுக்கும் சமையலறைக்கும் செல்லக் கூடாது. பிற மாணவிகளைத் தொடக்கூடாது. விடுதி அறையில் தங்காமல் கட்டடத்தின் பேஸ்மெண்ட்டில் தங்க வேண்டும். மற்ற மாணவிகளுடன் பேசாமல், வகுப்பில் கடைசி இருக்கையில் அமர வேண்டும்.மாணவிகள், மாதவிடாயை மறைத்து இத்தடைகளை மீறியதாகப் புகார் எழுந்தது.

மாணவிகளை விசாரித்த தலைமை ஆசிரியை, மாணவிகளை நம்ப மறுத்து, கழிவறையில் பெண் ஆசிரியர்கள் முன், 68 மாணவிகளின்
உள்ளாடைகளைக் கழற்றி சோதனை செய்ய வைத்துள்ளார். இச்சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரின் உதவியுடன் நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க புகார் தந்துள்ளனர்.

ஸ்வேதா கண்ணன்