வாழ்வியல் பாடம்!



கலைஞரின் பிறந்த நாளுக்கு மகத்துவம் சேர்த்த ‘கலைஞரிடம் என்ன கற்க வேண்டும்?’ கட்டுரை ஒவ்வொரு தனி மனிதருக்கான வாழ்வியல் பாடமாய் சிந்திக்க வைத்துவிட்டது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மனோகர், மேட்டுப்பாளையம்; அ.யாழினி பர்வதம், சென்னை; கருணாகரன், போரூர்; கதிர்; திருநெல்வேலி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; ப.மூர்த்தி, பெங்களூரு; எம். சேவுகப்பெருமாள், பெருமகளூர்; இலக்சித், மடிப்பாக்கம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

உடன்பிறவா சகோதரர்களான மோடி - அமித்ஷாவின் நட்பு, வளர்ச்சி, இப்போதையை நிலை பற்றிய கட்டுரை அசத்தல்.
- பிரேமா குரு, சென்னை; க.நஞ்சையன், பொள்ளாச்சி; ப.மூர்த்தி, பெங்களூரு; நாகமுத்து, சென்னை; கார்த்திக் ஆனந்த், சென்னை.

‘Number’s Matter!’ - பகுதி சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. எண்களின் தகவல் அருமை.
- மனோகர், மேட்டுப்பாளையம்; சாய்கவின், பொள்ளாச்சி; பிரேமா குரு, சென்னை; சந்திரா, சென்னை.
ரகுல் - சாய் பல்லவியின் பேட்டி கோடையில் குளு குளு குல்பி.
- சாரதா, சென்னை; கலிவரதன், கீழ்க்கட்டளை; கருணாகரன், போரூர்; ஜெயசந்திரபாபு, சென்னை.

ஆந்திராவின் ரத்த சரித்திரம் தலை சுற்றவைக்கிறது. அடுத்த வாரமும் தொடரப்போவது பீதியைக் கிளப்புகிறது.
- நிலவழகு, நீலாங்கரை; ஜெயசந்திர பாபு, சென்னை; பிரேமா குரு, சென்னை; செம்மொழி, சேலையூர்.

முப்பது ஆண்டுகளாக ராசியான போட்டோகிராபராய் அசத்திவரும் தனலட்சுமி அம்மாள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை க்ளிக் செய்த கட்டுரை சூப்பர்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; பிரேமா குரு, சென்னை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை தானம் செய்த தமிழகப் பெண் மாசிலாமணியின் வியப்பான சிறப்பான சேவையைக் கண்டு மெய்சிலிர்த்தோம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; ஆத்மநாதன், ஆற்காடு; ஜெர்லின், ஆலந்தூர்; மகேஸ்வரி, பொள்ளாச்சி; சந்திரமாலா, நெய்வேலி.

படிச்சிக்கிட்டே நர்சரி கார்டன் நடத்தி மாசம் ஒரு லட்சம் சம்பாதிக்கிற ஜினுமோள் ஜார்ஜின் முயற்சி பிரமிக்க வைக்கிறது. அவரைப் பாராட்டி அளிக்கணும் ஒரு பூங்கொத்து.
- ரவிக்குமார், பொள்ளாச்சி; அ.யாழினி பர்வதம், சென்னை; மல்லிகா அன்பழகன், சென்னை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; இலக்சித், மடிப்பாக்கம்.

பருவநிலை மாற்றத்தினால் கடல் மட்டம் உயர்கின்ற செய்தியை விரிவாக படித்து முடித்ததும் நெஞ்சில் கவலையின் அளவும் உயர்ந்திருந்தது.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; அமிர்பத்ரா, சென்னை; கோவிந்தராஜ், சென்னை; மகேஸ்வரி, பொள்ளாச்சி.

ரீடர்ஸ் வாய்ஸ்