பிரியாணிக்கு ஃபைன்!



உலகில் பிரியாணி சாப்பிட்டதற்காக யாராவது ஃபைன் கட்டியிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

 யெஸ். அதனை பிராக்டிக்கலாக செய்து காட்டி பீதியை கிளப்பியிருக்கிறது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். தில்லி ஜவகர்லால் நேரு யுனிவர்சிட்டியில் படித்துவரும் சேப்பால் செர்பா, அமீர் மாலிக், மனிஷ் குமார், சத்ரூபா சக்ரபோர்த்தி என்ற நான்கு மாணவர்கள் விடுமுறையில் ஆசையாக பிரியாணி சமைத்து ஷேர் செய்து சாப்பிட்டிருக்கின்றனர்.

இதை மோப்பம் பிடித்து டென்ஷனானது நிர்வாகம். மூன்று மாணவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், ஒரு மாணவருக்கு ஸ்பெஷலாக 10 ஆயிரம் ரூபாயும் ஃபைன் போட்டு, பத்து நாட்களில் கட்டவேண்டும் என டெட்லைன் சொல்லியுள்ளது.தவிர, வருங்காலத்தில் பிரியாணி சமைத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.       

ரோனி