சிறுநீருக்காக துப்பாக்கிச் சூடு!



அமெரிக்காவில்தான் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் துப்பாக்கியால் பதில் சொல்லி, பலரையும் டெர்மினேட்டராய் மாறி காவு வாங்குவார்கள் என்று நினைக்கிறீர்களா?

இந்தியாவிலும் அதே ட்ரெண்ட் தொடங்கிவிட்டது. டில்லியின் கிரேட்டர் நொய்டாவிலுள்ள சமஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய், ஓம்வீர் என்ற இருவர்தான் கதாநாயகர்கள். வெளியே சென்றுவிட்டு ஊர் திரும்பியவுடன் நம்பர் 1 அவசரம். அருகிலிருந்த பெண்மணியின் வீட்டருகே இருந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டனர்.

அதைக் கவனித்த அப்பெண்மணி அவர்கள் இரவு 8.30க்கு திரும்ப அதே இடத்தில் அடுத்த ரவுண்ட் நம்பர் 1க்கு வந்தபோது, ‘நான்சென்ஸ்’ என சுத்தம் பற்றிய பாடம் எடுத்திருக்கிறார். போதையிலிருந்த இருவரும் 4 மணிநேரம் கழித்து பெண்மணியின் வீட்டுக்கு துப்பாக்கி சகிதமாக வந்து தாறுமாறாக சுட்டதில் வீட்டுக்காரம்மாவுக்கு வயிற்றில் தோட்டா. எப்ஐஆர் போட்டு டபுள் கிரிமினல்களையும் காவல்துறை தேடிவருகிறது

ரோனி