கதறல்!



-தொகுப்பு: ரோனி

பாராமுகமாக நின்று ஆணவத்தால் தன் மகளையே கொன்றுவிட்ட அப்பாவின் கதை இது. ஆந்திராவில் விஜயவாடாவைச் சேர்ந்த ஷிவ்குமார் - சுமாஸ்ரீ தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் இருவரும், தனித்தனியே வாழ்கின்றனர். ஷிவ் குமாருக்கு அப்படியொரு கோபம். தன் மனைவி சுமாவையும் எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரே மகள் சாய் ஸ்ரீயையும் கூட ரவுடிகளின் மூலம் அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டார்.

தன் மனைவியோடு பிரச்னை, சரி, இருவரின் காதலின் பரிசாக பிறந்த குழந்தை என்ன பாவம் செய்தது? தன் சிகிச்சைக்கு பணம் கேட்டு ஷிவ்குமாரின் மகள் சாய் ஸ்ரீ, தன் தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ் அப் வீடியோதான் பலரின் நெஞ்சையும் நெகிழ வைக்கிறது. ‘அப்பா, என்னால் என் நண்பர்கள் போல விளையாட முடியவில்லை.

உடலைத் தாக்கும் வலியைத் தாங்க முடியவில்லை. அம்மாவிடமும் பணமில்லாத நிலையில் எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்...’ என கதறிய ஒலி அவளது தந்தையின் காதில் ஏனோ கேட்கவேயில்லை. சரி, சாய் ஸ்ரீ என்னவானாள்? வீடியோ வெளியாவதற்கு முன்தினமே அவள் இறந்துவிட்டாள்...