சாய்பல்லவி ‘நோ’ சொல்கிறார்!



எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன் என சில சினிமா விஐபிக்கள் தங்களது கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அதுபோல் கொள்கையாக வைத்திருந்த நயன்தாரா, திடீரென மனம் மாறி விளம்பரப் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் இந்த விஷயத்தில், தான் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன் என உறுதியாகச் சொல்கிறார் சாய் பல்லவி.

சமீபத்தில் ஒரு ஆடை நிறுவனத்துக்காக அவரை அணுகியிருக்கிறார்கள். நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாற வேண்டும். இதற்கு ரூபாய் ஒரு கோடி வரை தருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் விளம்பரப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்றும், ஒரு கோடியல்ல, எத்தனை கோடி கொடுத்தாலும் முடியாது எனவும் கறாராக சொல்லிவிட்டாராம் சாய் பல்லவி. இதை கேள்விப்பட்ட சில நடிகைகள், பிழைக்கத் தெரியாத பொண்ணா இருக்கே என சிரித்தபடி கமெண்ட் அடிக்கிறார்களாம்.

- யா