உதடுதான் கதவு!
சரோஜாதேவி பதில்கள்
* ‘சப்’புன்னு ஒரு மேட்டர் சொல்லு சரோ.... - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. சுரைக்காய்க்கு உப்பில்லை.
* திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் தலையாட்டி பொம்மையாய் ஆவது ஏன்? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. தலையாட்டலைன்னா வாலாட்ட வழி கிடைக்காது.
* வண்டி எப்போது குடை சாயும்? - சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர். எந்த வண்டியை கேட்குறீங்க?
* இருட்டு அறையில் முரட்டுக் குத்து? - த.சத்தியநாராயணன், அயன்புரம். படம் பார்த்ததிலே இருந்து மூக்குத்தி போடுறதுக்கே பயமாயிருக்கு.
* காதலில் முத்தத்தின் முக்கியத்துவம் என்ன? - கே.நடராஜன், திருவண்ணாமலை. சொர்க்கவாசலுக்கு உதடுதான் கதவு.
|