இதே ரோதனை!



அரண்மனை பேயாக வந்த பாடகி நடிகைக்கு சில காலம் முன்பு வரை கால்ஷீட் பிஸியாகவே இருந்தது. ஹீரோயினாகத்தான் அடம் பிடிப்பேன் என்றில்லாமல் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் போதுமென்று, கதைக்காக ஒத்துக் கொண்டு சிறப்பாக நடிப்பார்.

சில நாட்களாகவே அம்மணியின் வீட்டுப் பக்கமாக தயாரிப்பாளர்கள் யாருடைய தலையும் தென்படவில்லை. உச்சத்தில் இருந்த கேரியர் திடீரென சரிய ஆரம்பித்துவிட்டது. விஷயம் என்னவென்றால், திடீரென சம்பளத்தை முன்னறிவிப்பே இல்லாமல் பல மடங்கு உயர்த்திவிட்டாராம்.

மேலும், தயாரிப்பாளர்களுக்கு விதம் விதமாக சம்பளம் தாண்டிய செலவுகளை வைக்க ஆரம்பித்து விட்டாராம்.“நாலு படம் ஓடினா போதும். இதே ரோதனையாப் போச்சி” என்று புலம்புகிறார் நடிகையை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர் ஒருவர்.

- ஒய்2கே