திருடர்களோடு மல்லிகா கட்டிப்புரண்டு கவர்ச்சி சண்டை!



அதிரடி என்றால் அலியாபட் என்று மும்பையில் பேசிக் கொள்கிறார்கள்.  தடலாடியாக ஏதாவது அறிக்கை விடுத்து மொத்த மீடியாவின் பார்வையையும் தன்னை நோக்கி குவியச் செய்வது இவரது டெக்னிக்காக இருக்கிறது. “சல்மான்கானோடு லிவிங் டுகெதர் முறையில் வாழ நான் ரெடி. அவர் ரெடியா?” என்று சமீபத்தில்  அலியாபட் அறிக்கைவிட, காதல் மன்னனான சல்மான்கானே ஆடிப்போயிருக்கிறாராம்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தன்னுடைய காதலருடன் வசிக்கிறார் மல்லிகா ஷெராவத். இவர் வசிக்கும் பிளாட்டில் முகமூடிக் கொள்ளையர்கள் நகை, பணம் திருட முயற்சித்திருக்கிறார்கள். சினிமா பாணியில் இவர்களோடு கட்டிப்புரண்டு சண்டை போட்டு விரட்டி அடித்திருக்கிறார் மல்லிகா.

சமீபத்தில் நடந்த மிட்நைட் பார்ட்டி ஒன்றில் பிபாஷா பாசுவுக்கும், கங்கனா ரணாவத்துக்கும் குழாயடிச் சண்டை நடந்திருக்கிறது. முழு போதையில் இருந்த இருவரும் விளம்பர வாய்ப்பு தொடர்பாக சண்டை போட்டுக் கொண்டார்களாம்.

“மற்ற நடிகைகளைப் போல ஹீரோக்களோடு ‘அதற்கு’ நான் ஒத்துழைப்பதில்லை” என்று சமீபத்தில் சோனம் கபூர் அதிரடி ஸ்டேட்மென்ட் விடுத்தார். இதைக் கேட்டு மனசுக்குள் புழுங்கினாலும் யாரும் வெளிப்படையாக எதிர்வினை வைக்கவில்லை. தீபிகா படுகோனே மட்டும் ஆவேசமாக, “சோனுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது” என்று கொதித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘2.0’ படவிழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்நிகழ்வுக்கு யாரும் அழைக்காத நிலையில் பார்வையாளராகக் கலந்துகொண்டார் சல்மான்கான். மேடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த டைரக்டர் கரண் ஜோஹர், சல்மானை பார்வையாளர் வரிசையில் கவனித்துவிட்டு, உடனே மேடைக்கு அழைத்தாராம்.

- ஜியா