தனுஷுக்கு ஜோடியாக கவுதமி மகள்?



ஸ்ருதி, அக்‌ஷரா சீற்றம்!

கமல்ஹாசனுடன் பதிமூன்று ஆண்டுகள் ‘லிவிங் டுகெதர்’ முறையில் சேர்ந்து வாழ்ந்த கவுதமி, திடீரென்று அவரைப் பிரிந்தார். இதற்கு என்ன காரணமென்று துல்லியமாக கவுதமி சொல்லவில்லை. கமலும் இதைப்பற்றி பேச மறுக்கிறார்.

இதற்கிடையே கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்தான் இந்தப் பிரிவுக்கு காரணம் என்று செய்திகள் பரவின. உடனடியாக ஸ்ருதி, “எனக்கு என் பெற்றோரும், தங்கையும்தான் முக்கியம். மற்ற பிரச்னைகளை நான் கருத்தில் கொள்வ தில்லை” என்று நாசூக்காக மறுத்தார்.

இதற்கிடையே கமல்ஹாச னின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசனுக்கு போட்டியாக தன்னுடைய மகள் சுப்புலட்சுமியை சினிமாவில் ஹீரோயினாக கவுதமி களமிறக்குகிறார் என்று தகவல்கள் கசிகின்றன. இதைக் கேள்விப்பட்டு ஸ்ருதியும் அக்‌ஷராவும் கவுதமி மீதும் சுப்புலட்சுமி மீதும் கடும் கோபம் கொண்டிருப்பதாகவும் கூடுதலாக சொல்கிறார்கள்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தின் மூலமாக சுப்புலட்சுமியின் திரை அரங்கேற்றம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இத்தகவலை சவுந்தர்யாவோ, தனுஷோ மறுக்காததால் பரபரப்பு கூடியது.

அதே நேரம், “எல்லாப் பிரச்னைகளுக்கும் என்னையே காரணம் காட்டு கிறார்களே!” என்று தனுஷ் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார். ‘3’ படத்தில் ஸ்ருதியும், ‘ஷமிதாப்’ என்கிற இந்திப் படத்தில் அக்‌ஷராவும் தனுஷோடு ஜோடி சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கவுதமி இத்தகவலை முற்றிலு மாக மறுத்திருக்கிறார்.

“நானே விரைவில் ஒரு சினிமா நிறுவனம் தொடங்க இருக்கிறேன். திறமையான புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் நல்ல திரைப்படங்களைத் தயாரிப்பதே என் நோக்கம். இந்தப் படங்களில் எனக்குப் பொருத்தமான வேடங்கள் இருக்கும் பட்சத்தில் நடிப்பேன். என் மகள் திரையுலகுக்கு வருவது அவரது விருப்பம்.

 சுப்புலட்சுமியை யாருக்கோ போட்டியாக நான் களமிறக்க முயற்சிக்கிறேன் என்கிற செய்திகளில் உண்மை கொஞ்சம் கூட இல்லை. அவர் இப்போது படித்துக் கொண்டிருக்கிறார். அவரது முழு கவனமும் படிப்பில் மட்டுமே இருக்கிறது. படிப்பு முடிந்தவுடன் அவரது எதிர்காலத்தை அவரே தீர்மானிப்பார்” என்று சொல்கிறார் கவுதமி.

- தேவராஜ்