அலைபாயும் மனசு!



சரோஜாதேவி பதில்கள்

*குத்துச்சண்டை பயிற்சி எடுப்பதால்தான் தன் உடம்பு கட்டுக்கோப்பாக இருக்கிறது என்கிறாரே அந்த
அரபுக்குதிரை நடிகை?
- ப.முரளி, சேலம்.அவரிடம் குத்து வாங்குபவர் ஏக்கத்திலேயே இளைத்துவிடுவாரே?

* மூடியிருக்கும் பொருளுக்கு தனி மவுசு அல்லவா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
இல்லையா பின்னே? ஆனால், அப்பப்போ இலைமறை காய்மறையாய் காட்டி சஸ்பென்ஸை கூட்டிக்கொண்டே போக வேண்டும்.

*ஒரு பெண் நகத்தைக் கடிப்பதற்கும், உதட்டைக் கடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
‘யாருடைய உதட்டை’ என்கிற தெளிவு இந்தக் கேள்வியில் இல்லாததால் பதில் சொல்ல முடியவில்லை.

*ஓரிரவில் எத்தனை முத்தம் என்று அதிகபட்ச லிமிட் வைத்துக் கொள்ளலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
அந்த நேரத்துலே போய் விரலுவிட்டு எண்ணிக்கிட்டிருப்பீங்களா? காட்டாறுன்னா கண்ணுமண்ணு தெரியாம பாஞ்சிடணும் சார்.

* ‘அலைபாய்ந்தது மனசு’ என்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு மனசு பெருசாக வளர்ந்துவிட்டது என்று பொருளோ என்னவோ, யாருக்கு தெரியும்?