ஹீரோவானார் பஞ்சாயத்து!



விருத்தாசலம் வட்டாரத்தில் விருதகிரி பிரபலம். கச்சிராயநத்தம் என்கிற கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தபோது மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களைச் செய்தவர். மக்கள் பணிக்காக ஜனாதிபதி விருது வாங்கிய விருதகிரி, சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார் என்றதுமே ‘விருத்தாசலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு ஊரே திரண்டுவந்தது. “ஸ்வேதா, சமீரா, ஷெரீன்தாஹா என்று மூன்று ஹீரோயின்கள் சார். ஒரே சமயத்தில் மூணு பேரையும் லவ் பண்ண ரொம்ப வெட்கமாக இருந்தது” என்று வெள்ளந்தியாக சொன்னார் விருதகிரி.



 சினிமாவுக்கு மேக்கப் போட்டுவிட்டாலும் முகத்தில் இன்னும் கிராமக்களை அப்பட்டமாகத் தெரிகிறது. நிஜத்தில் மக்கள் சேவகனாக இருக்கும் அவருக்கு படத்தில் குடித்துவிட்டு ரவுசு செய்யும் ஊதாரி கேரக்டராம். ஆனால், அந்த பாத்திரம் வழியாக மக்களுக்கு அவசியமான கருத்துகளை பிரச்சாரம் செய்திருக்கிறார் இயக்குனர் ரத்தன்கணபதி என்கிறார்கள். படம் வரட்டும். பார்த்துட்டுச் சொல்றோம்.

-ரா