அக்கா, அண்ணி, வில்லி... மதுமிதா!



‘குடைக்குள் மழை’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘யோகி’ உட்பட பல படங்களில் நடித்த தெலுங்கு வரவு மதுமிதா. ‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த தெலுங்கு நடிகர் சிவபாலாஜியைக் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். முழுமையான இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள்.‘பிரியாணி’ ரிலீசான பிறகு சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கிய அவர், தற்போது மீண்டும் திறமை காட்ட ரெடி ஆகியிருக்கிறார். “குழந்தைகளை கவனிப்பதற்காகவே சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன்.


 
சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நானி நடிக்கும் ‘பலே பலே மகாடிஹோய்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். தமிழில் சில வாய்ப்புகள் வந்துள்ளது. அக்கா, அண்ணி, வில்லி என எல்லா கேரக்டரிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், படத்தில் திருப்பு முனையாக என் கேரக்டர் அமைய வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எதிர்பார்ப்பு” என்கிறார் மதுமிதா. இதையேதான் நம்ம ‘கருத்தம்மா’ ராஜயும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

- தேவா