கிச்சன் டிப்ஸ்...



*குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் வாழை இலை ஓரத்தில் இருக்கும் தண்டிளை ஒரு தண்டு நறுக்கி குழம்பில் போட்டால் உப்பு குறைந்து விடும்.
*எலுமிச்சம் பழங்களின் மீது சிறிது தேங்காய் எண்ணெய் தடவி ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை நீண்்ட நாட்கள் வாடிப் போகாமல் இருக்கும்.
- ஆர்.பூஜா, சென்னை.

*தேங்காய் நாரைக் கொண்டு வாஷ்பேஷனைத் தேய்த்துக் கழுவினால் வாஷ்பேனில் படிந்த கறைகள் எளிதில் நீங்கி விடும்.
- ரெ.கயல்விழி, வடுகப்பட்டி.

*ஜவ்வரிசியை எண்ணெய் விட்டுப் பொரித்துக் கொள்ளவும், மோரில் தேவையான அளவு உப்பைப் போட்டு பொரித்த ஜவ்வரிசியைப் போட்டு சீரகம் சேர்த்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு பெருங்காயம் கரைத்து ஊற்றி கடுகு தாளிக்கவும். இந்தப் பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*அவரைக்காய் பொரியல் செய்யும் போது அத்துடன் சிறிது பால் சேர்த்தால் பொரியல் சுவையாக இருக்கும்.
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

*சர்க்கரை டப்பாவின் மூடியைச் சுற்றி சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்து விட்டால், அதில் எறும்புகள் வராது.
*வாழை இலையைக் கொண்டு தேய்த்த பின், தோசைக் கல்லில் தோசை வார்த்தால், தோசை மிக எளிதாக, அழகாக எடுக்க வரும்.
- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.

*அரிசி நிறம் பழுப்பு நிறமாக இருந்தால் வேகும் போது அரிசியுடன் சிறிது மோரை விட்டால் அது வெள்ளையாக மாறிவிடும்.
*மிளகாய் பொடி வைத்துள்ள பாட்டிலில் சிறிய துண்டு பெருங்காயத்தைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கும் வாசனையும் கூடும்.
- ஆர். அஜிதா, கம்பம்.

*பாத்திரங்களை கழுவி அடுக்கும்போது ஒன்றுக்குள் ஒன்று மாட்டி, எடுக்க சிரமமாக இருக்கும். அந்த பாத்திரங்களை அப்படியே ஃப்ரீசருக்குள் 15 நிமிடம் வைத்து. பின்பு வௌியில் எடுத்து குப்புற தட்டினால் உடனே பிரிந்து வந்து விடும்.
- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

*வறுத்த வேர்க்கடலையை நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனை மசால் வடை மாவுடன் சேர்த்து  வடை தயாரித்தால் சுவையாக இருக்கும்.
புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்தால் சுவை மிகும்.
- ஆர்.பிரபா, திருநெல்வேலி.